101 வயது காணும் பேராசிரியர் (விருதுநகரில் கல்லூரியில் பணியாற்றியவர்) மானமிகு க. திருமாறன் அவர்கள் 101ஆம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறார் என்பது மகிழ்ச்சிக்குரியது. அடக்கமானவர் – திராவிட இயக்கக் கொள்கையில் சிறு வயது முதல் ஊறித் திளைத்தவர். அவர் நடமாட்டத்தில் இருந்தபோது சென்னைக்கு வரும் போதெல்லாம் பெரியார் திடலில் இயங்கும் நூலகம் – ஆய்வகத்திற்கு வந்து படிக்கக் கூடியவர்.
விருதுநகருக்குச் செல்லும்போது அவரைச் சந்தித்து மகிழ்வதுண்டு.
மேலும் நல்ல உடல் நலத்துடன் அவர்தம் வாழ்விணையருடன் நீடு வாழ வாழ்த்துகிறோம்.
சென்னை
14.11.2024
கி.வீரமணி
தலைவர்
திராவிடர் கழகம்