கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்

1 Min Read

13.11.2024
டெக்கான் கிரானிக்கல், சென்னை:
* அரசியல் சட்டத்தை அழிக்க ஆர்.எஸ்.எஸ். வேலை செய்கிறது, ராகுல் தாக்கு.
டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:
* மகாராட்டிராவில் நடந்த விவசாயிகள் தற்கொலை குறித்து மோடி மவுனம் ஏன்? காங்கிரஸ் கேள்வி.
இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* ஜார்கண்ட் தேர்தலில் பெண்களுக்கு 33% வேலை ஒதுக்கீடு – ஜேஎம்எம் தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி
தி டெலிகிராப்:
* பாஜகவை அரசாங்கத்தில் இருந்து வெளியேற்றினால், இளைஞர்களுக்கு வேலை கிடைக்கும், அகிலேஷ் காட்டம்.
* பாஜக தனது ‘கோடீஸ்வர நண்பர்களுக்கு’ வழங்கிய சலுகைகளை விட இந்தியா கூட்டணி பெண்கள், விவசாயிகளுக்கு முன்னேற்ற திட்டங்களை தரும்: ராகுல்
டைம்ஸ் ஆப் இந்தியா:
* பிளவுபடுத்தும் மற்றும் சர்ச்சைக்குரிய பிரச்சினை களை பாஜக எழுப்பினால் நாங்கள் அரசாங்கத்தில் சேர மாட்டோம்; தொங்கு சட்டமன்றம் ஏற்பட்டால், எதிர்க்கட்சியான எம்.வி.ஏ உடன் என்சிபி கைகோப் பதையும் பரிசீலிப்போம், என்று அஜித் என்.சி.பி. கட்சி வேட்பாளர் நவாப் மாலிக் திட்டவட்டம்.
* தமிழ்நாட்டில் அனைவரையும் உள்ளடக்கிய ஸ்டார்ட் அப் வளர்ச்சிக்கு அரசு பாடுபடுகிறது, ஒடுக்கப்பட்ட சமூகங்களைச் சேர்ந்த தொழில் முனைவோரை உருவாக்கும் நோக்கில் தமிழ்நாடு அரசு எஸ்சி/எஸ்டி தொடக்க நிதியை உருவாக்கியது. 2023ல் 30 கோடியாக இருந்த எஸ்சி/எஸ்டி நிதி ஒதுக்கீட்டை 50 கோடியாக உயர்த்தியது, துணை முதலமைச்சர் உதயநிதி பேச்சு.

– குடந்தை கருணா

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *