உலகத் திருக்குறள் கூட்டமைப்பு சார்பாக தமிழ்நாடு அளவில் கோரிக்கை முழக்கமிடும் அறப்போராட்டம் நேற்று நடந்ததில், காரைக்குடி மாவட்டக்கிளை ஏற்பாட்டில், கண்ணதாசன் மணிமண்டபம் முன்பு நேற்று (12.11.2024) மாலை தொடங்கியது. இதற்கு மாநிலத்துணைத்தலைவர் புலவர் ஆறு. மெய்யாண்டவர் தலைமை வகித்தார். தமிழ் ஆர்வலர் அ.சி.தியாகராசன் முன்னிலை வகித்தார். ” இந்திய அரசை வலியுறுத்தி, “செம்மொழித் தமிழை ஆட்சி மொழியாக அறிவிக்க வேண்டும். ” ” திருக்குறளைத் தேசிய நூலாக அறிவிக்க வேண்டும். “சென்னை, மதுரை உயர்நீதிமன்றங்களில் தமிழை வழக்காடு மொழியாக்க வேண்டும் ” என்ற கோரிக்கையை முன்வைத்து முழக்கமிட்டார்கள். இந்த அறவழிப்போராட்டத்தில் பாரதிதாசன் தமிழ்ப் பேரவை, வள்ளுவர் பேரவை, வீறு கவி முடியரசனார் அவைக்களம், தமிழ்த்தாய் கலைக்கூடம், பகுத்தறிவாளர் கழகம், தமுஎகச அமைப்புகள், தமிழ் ஆர்வலர்கள், குறள் வழித் தொண்டர்கள், பேராசிரியர்கள், தமிழ் ஆசிரியர், ஆசிரியைகள் உட்பட ஏராளமானவர்கள் பங்கேற்றார்கள்.
திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்கக் கோரி காரைக்குடியில் தமிழ் அமைப்புகள் ஆர்ப்பாட்டம்!
1 Min Read
விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..
அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.
"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.
தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!
TAGGED:செம்மொழி
Leave a Comment
Popular Posts
10% Discount on all books
