திருநின்றவூரில் நவம்பர் 16 அன்று தனியார் வேலை வாய்ப்பு முகாம்

1 Min Read

திருவள்ளூர், நவ. 12- திருநின்றவூர் ஜெயா கலைக்கல்லுாரியில் வரும் 16இல் தனியார் வேலை வாய்ப்பு முகாம் நடக்கிறது. திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர்

பிரபுசங்கர் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:
திருவள்ளூர் மாவட்ட நிர்வாகம், வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மய்யம் இணைந்து தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் வரும், 16இல் திருநின்றவூர் ஜெயா கலை கல்லுாரியில் நடக்கிறது. முகாமில் 200க்கும் மேற்பட்ட முன்னணி தனியார் நிறுவனங்கள் பங்கேற்று தங்களுக்கு தேவையான 15,000க்கும் மேற்பட்ட பணி காலியிடங்களை நிரப்ப உள்ளனர். முகாமில் திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களைச் சேர்ந்த முன்னனி தனியார் துறை நிறுவனங்கள் பங்கேற்க உள்ளன.

முகாமில் 8, 10, 12ஆம் வகுப்பு, பட்டப்படிப்பு, அய்.டி.அய்., மற்றும் டிப்ளமோ, பொறியியல், செவிலியர் படித்தவர்கள் கலந்து கொள்ளலாம். முகாமில் பங்கேற்க விருப்பமுள்ளோர், www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளளலாம்.

தனியார் துறையில் வேலைவாய்ப்பு பெறுபவர்களின் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு ரத்து செய்யப்பட மாட்டாது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *