கோவை, நவ.12- திராவிடர் கழக கோவை கழக மாவட்ட கலந்துரையாடல் கூட்டம் 10.11.2024 அன்று மாலை 6.30 மணி அளவில் கோவை சுந்தராபுரம் காமராஜ் நகர் கண்ணப்பன் அரங்கத்தில் நடைபெற்றது.
கழக மாநில ஒருங்கிணைப்பா ளர் இரா.ஜெயக்குமார் தலைமை ஏற்று ஈரோடு மாநாடு குறித்தும் தமிழர் தலைவர் ஆசிரியர் பிறந்த நாள் விழா குறித்தும் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் அளப்பரிய பணிகளை குறித்தும் எடுத்துரைத்தார்.
கோவைமாவட்டத்தில் கழகப் பிரச்சார பணிகளை தொய்வின்றி தொடர்ந்து நடந்திட மாதம் ஒரு பிரச்சார கூட்டத்தை நடத்திட வேண்டும் என வலியுறுத்தி உரையாற்றினார்.
தொடர்ந்து கோவை மாநகர செயலாளர் கழக சொற்பொழிவாளர் க.வீரமணி, பகுத்தறிவாளர் கழக பொறுப்பா ளர் ஆனந்தராஜ், மாவட்ட இளைஞரணி தலைவர் செ.மதியரசன், பகுதி செயலாளர் முத்து.கணேஷ், பகுதி தலைவர் கவி.கிருஷ்ணன், சுந்தராபுரம் பகுதி தலைவர் குமரேசன், மாவட்ட தொழிலாளர் அணி செயலாளர் வெங்கிடு, மாநில திராவிட மாணவர் கழக துணைச் செயலாளர் ராகுல்,மாவட்ட மாணவர் கழக செயலாளர் ராசா, பகுத்தறிவாளர்கள் பொறுப்பாளர் சிவக்குமார், செல்வம், குரு, வெற்றிச்செல்வன் ஆட்டோ சக்தி, கோபாலகிருஷ்ணன், மாவட்ட பகுத்தறிவாளர் கழக செயலாளர் சின்னச்சாமி,மாநகரத் தலைவர் தி.க செந்தில்நாதன்,பொதுக்குழு உறுப்பினர் பழ.அன்பரசு ,மாவட்ட துணைத் தலைவர் மு.தமிழ்ச்செல்வன்,மாவட்டத் தலைவர் ம.சந்திரசேகர் ஆகியோர் கருத்துரை ஆற்றினர்
கூட்டத்தில், நவம்பர் 26 ஈரோட்டில் நடைபெறும் குடிஅரசு இதழ் நூற்றாண்டு சுயமரியாத இயக்க நூற்றாண்டு மாநாட்டில் கோவை கழக மாவட்டத்தில் இருந்து தனி வாகனத்தில் குடும்பத்துடன் பெருந்திரளாக பங்கேற்று சிறப்பிப்பது எனவும்,
டிசம்பர் 2 தமிழர் தலைவர் ஆசிரியர் பிறந்தநாள் விழாவில் (சுயமரியாதை நாள்) சென்னையில் கோவை கழக மாவட்டத்திலிருந்து பெருந்திரளாக பங்கேற்று தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களை சந்தித்து ‘விடுதலை’ சந்தா மற்றும் பெரியார் உலக நிதியை வழங்கி பிறந்தநாள் வாழ்த்துத் தெரிவிப்பது எனவும்,
தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் 92வது பிறந்த நாளை முன்னிட்டு கோவை கழக மாவட்டத்தில் பிரச்சாரக் கூட்டங்களை நடத்துவது மரக்கன்று நடுதல் குருதிக்கொடை வழங்குதல் உள்ளிட்ட நிகழ்வுகளை நடத்தி மகிழ்வது எனவும்,
டிசம்பர் 24 அறிவுலக ஆசான் தலைவர் தந்தை பெரியார் அவர்கள் நினைவு நாள் அன்று தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவிப்பது அமைதி ஊர்வலம் நடத்துவது கழகக் கொடி ஏற்றுவது உள்ளிட்ட நிகழ்வுகளை கோவை மாவட்டத்தில் மிக சிறப்பாக நடத்துவது எனவும்,
டிசம்பர் 28,29 திருச்சியில் நடை பெறும் உலக பகுத்தறிவாளர் மாநாட்டில் கோவை கழக மாவட்டத்திலிருந்து பெறுந்திர ளாக பங்கேற்று சிறப்பிப்பது எனவும்,
2024 டிசம்பர் மாதம் முதல் கோவை கழக மாவட்டத்தில் கோவை மாநகரத்தில் வார்டு வாரியாகவும் பிரச்சாரக் கூட்டங்களை நடத்துவது என முடிவு செய்யப்பட்டது கழகப் பொறுப்பாளர்கள் தோழர்கள் முழு ஒத்துழைப்பு வழங்குவது எனவும்,
கோவையில் தமிழ்நாடு அரசு சார்பில் தந்தை பெரியார் அறிவுசார் நூலகம் மற்றும் அறிவியல் மய்யம் அமைக்கப்படும் என அறிவித்த சமூக நீதிக்கான சரித்திர நாயகர் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு கோவை மாவட்ட திராவிட கழகம் பாராட்டையும் நன்றியும் தெரிவித்துக் கொள்கிறது எனவும் தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன.