டிசம்பர் 28, 29 இல் திருச்சி பகுத்தறிவாளர் மாநாட்டில் அணி திரள ஆவடி மாவட்ட பகுத்தறிவாளர் கழக கலந்துரையாடலில் முடிவு

Viduthalai
1 Min Read

ஆவடி,நவ.12- ஆவடி மாவட்ட பகுத்தறிவாளர் கழக கலந்துரை யாடல் கூட்டம் கடந்த 10.11.2024 அன்று மாலை 6.30 மணிக்கு ஆவடி பெரியார் மாளிகையில் மாநில தலைவர் இரா.தமிழ்ச்செல்வன் தலைமையில் மாவட்ட கழக தலைவர் வெ.கார்வேந்தன் செயலாளர் க.இளவரசன் முன்னிலையில் மாவட்ட பகுத்தறிவாளர் கழக செயலாளர் க.கார்த்திகேயன் வரவேற்புரையுடன் துவங்கியது.
மாநில தலைவர் தமிழ்ச்செல்வன் திருச்சியில் டிசம்பர் மாதம் நடைபெறும் அகில இந்திய பகுத்தறிவாளர் கழக மாநாட்டின் நோக்கம் குறித்தும் அனைவரும் திரளாக கலந்து கொள்ளவேண்டிய அவசியம் குறித்தும் வலியுறுத்தி பேசினார்.
தொடர்ந்து சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட தலைமைக்கழக அமைப்பா ளர் வி.பன்னீர்செல்வம், மாநில பகுத்தறிவாளர் கழக அமைப்பா ளர் கோ.வி.கோபால் ஆகியோர் உரையாற்றினர்.

திராவிடர் கழகம்

மாநில தலைவர் வேண்டு கோளுக்கு இணங்க முதல் கட்ட நன்கொடையை கழக தோழர்கள் ஆர்வமுடன் அறிவித்தனர்.
நிகழ்வில் மாநில திராவிடர் கழக தகவல் – தொழில்நுட்ப குழு ஒருங்கிணைப்பாளர் வி.சி.வில்வம், ஆவடி மாவட்ட திராவிடர் கழக துணை தலைவர் வை.கலையரசன், துணை செயலாளர்கள் உடுமலை வடிவேல், பூவை தமிழ்ச்செல்வன், மாவட்ட திராவிடர் கழக இளைஞரணி தலைவர் சு.வெங்கடேசன், துணை செயலாளர் சென்னகிருட்டிணன், மாவட்ட மகளிர் பாசறை செயலாளர் அன்புச் செல்வி, ஆவடி நகர தலைவர் கோ.முரு கன், செயலாளர் தமிழ் மணி, துணை தலைவர் சி.வச்சிர வேல்,பட்டாபிராம் பகுதி தலைவர் இரா.வேல்முருகன், திருமுல்லைவாயில் பகுதி தலைவர் இரணியன் (எ) அருள் தாஸ், செயலாளர் ரவீந்திரன், பூவிருந்தவல்லி நகர செயலாளர் தி.மணிமாறன்,திருவேற்காடு பகுதி கழக தோழர்கள் பிரபாகரன், கா.சின்னதுரை, பாக்கியலட்சுமி, பசுபதி ஆவடி தோழர்கள் அரி கிருட்டிணன், மனோகரன், மதி வாணன், சுந்தர்ராஜன் (காங்கிரஸ்) பூவிருந்தவல்லி சந்தோஷ், பெரியார் பிஞ்சு தருண் ஆகியோர் கலந்து கொண்டனர்.
நிறைவாக ஆவடி மாவட்ட பகுத்தறிவாளர் கழக துணைத் தலைவர் ஜெயராமன் நன்றி கூறி னார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *