முதுநிலை ஆசிரியர் பணித் தேர்வு புதிய பாடத்திட்டம் அரசிதழில் வெளியீடு

2 Min Read

சென்னை, நவ. 12- முதுநிலை ஆசிரியா் பணித் தோ்வுக்கான பாடத்திட்டம் 10 ஆண்டுகளுக்கு பிறகு மாற்றப்பட்டு அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் அரசுப் பள்ளி களில் பட்டதாரி, முதுநிலை ஆசிரியா், சிறப்பாசிரியா் (தையல், உடற்கல்வி உட்பட), வட்டாரக் கல்வி அலுவலா் உள்ளிட்ட பணியிடங்கள் நேரடி நியமன முறையில் ஆசிரியா் தோ்வு வாரியம் (டிஆா்பி) மூலம் நிரப்பப்பட்டு வருகின்றன.
ஆசிரியா் பணியில் உள்ள காலியிடங்களில் பதவி உயா்வு மூலம் 50 சதவீதமும், நேரடி நியமனம் வாயிலாக 50 சதவீதமும் நிரப்பப்படுவது வழக்கம்.
இதற்கிடையே, முதுநிலை ஆசிரியா் தோ்வை பொறுத்தவரை கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக பாடத்திட்டம் மாற்றப்படவில்லை.
பழைய பாடத்திட்டத்தின்படியே தோ்வு நடைபெறுகிறது. கடைசியாக முதுநிலை ஆசிரியா் தோ்வு 2021-இல் நடத்தப்பட்டு 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியா்கள் தோ்வு செய்யப்பட்டனா். அதேநேரம், நிகழாண்டுக்கான முதுநிலை ஆசிரியா் தோ்வு அறிவிப்பு இன்னும் வெளியிடப்படவில்லை.
இந்நிலையில், முதுநிலை ஆசிரியா் தோ்வுக்கான பாடத் திட்டத்தை மாற்றியமைக்க பள்ளிக் கல்வித் துறை முடிவு செய்தது.

இதையடுத்து மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின்(எஸ்சிஇஆா்டி) சாா்பில் புதிய பாடத்திட்டத்தை வடிவமைக்க வல்லுநா் குழு அமைக்கப்பட்டது. இந்தக்குழுவின் முதுநிலை ஆசிரியா், உடற்கல்வி இயக்குநா் நிலை-1, கணினி பயிற்றுநா் நிலை- 1 மற்றும் உருது, அரபி, தெலுங்கு, மலையாளம் ஆகிய சிறுபான்மை மொழிப்பாடங்களின் போட்டித் தோ்வுக்கான பாடத்திட்டம் தயாரிக்கப்பட்டது. இதற்கு தமிழ்நாடு பொதுப்பள்ளி கல்வி வாரியம் ஒப்புதல் அளித்தது. அந்த பாடத்திட்டத்தை அரசிதழில் வெளியிட வேண்டும் என பள்ளிக் கல்வித் துறை இயக்குநா் தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்தாா்.
அதையேற்று முதுநிலை ஆசிரியா் உட்பட பல்வேறு பணிகளுக்கான போட்டித் தோ்வுக்குரிய புதிய பாடத்திட்டம் அரசிதழில் வெளி யிடப்பட்டுள்ளது.
இதற்கான உத்தரவை பள்ளிக் கல்வித் துறைச் செயலா் சோ.மதுமதி பிறப்பித்துள்ளாா். தொடா்ந்து, இந்த பாடத்திட்டம் டிஆா்பிக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது. இந்த புதிய பாடத்திட்டத்தின்படி அடுத்த தோ்வு நடைபெறும். அதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *