தூக்கத்தின் ஆக்கம்!

1 Min Read

ஆரோக்கியமான வாழ்விற்கு மிக அவசியமானது தூக்கம். நம் உடலில் தூக்கத்தை ஏற்படுத்துவது மெலடோனின் எனும் ஒரு ஹார்மோன். இது பீனியல் சுரப்பியில் இருந்து உற்பத்தி ஆகிறது.

இதுவே இரவில் துாக்கத்தையும் பகலிலே விழிப்பையும் தருகிறது. இந்த ஹார்மோன் மூளைக்குள்ளே சென்று மூளையை ஓய்வுகொள்ளச் செய்கிறது. நம் உடலுக்குள் இருக்கும் உயிரியல் கடிகாரம் சரியாக இயங்குவதற்கு, இது ஒரு முக்கிய காரணி.

பலர் துாக்கமின்மையால் அவதிப்படுகின்றனர். இதைச் சரி செய்வதற்காக மெலடோனின் ஹார்மோனை மாத்திரையாக எடுத்துக் கொள்ள மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். ஆனால், இது எந்த அளவு எடுத்துக் கொள்ள வேண்டும், எந்த நேரத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும் என்பது குறித்துப் பல்வேறு கருத்து வேறுபாடுகள் உள்ளன.
இதுவரை மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளில் துாங்கச் செல்வதற்கு, 30 நிமிடம் முன்பாக 2 மில்லி கிராம் எடுத்துக் கொண்டால் போதும் என்று சொல்லப்பட்டு வந்தது.

1,689 பேர் பங்கேற்ற ஆய்வில் இவர்களுக்குப் பல்வேறு அளவுகளில், பல்வேறு நேரங்களில் மருந்து கொடுக்கப்பட்டது.
இறுதியாகத் துாங்கச் செல்வதற்கு மூன்று மணி நேரம் முன்பாக 4 மில்லிகிராம் அளவு இந்த ஹார்மோனை எடுத்துக்கொள்வது நல்ல துாக்கத்தை வரவழைக்கும் என்று கண்டுபிடிக்கப்பட்டது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *