இன்று நாம் எவ்வளவோ மாறுபாடு அடைந்து விட்டோம். நம் வசதிகளும், வாழ்வும் ஏராளமாகப் பெருகியும் விட்டன. அதற்கு முன் கட்டை வண்டிதான், இன்று ரயில், மோட்டார், ஆகாய விமானம் முதலிய நவீன வசதிகள், தீ உண்டாக்குவதற்குச் சிக்கிமுக்கிக் கல்லை உராய்ந்தோம்; இன்று ஒரு பொத்தானை அமுக்கினால் ஆயிரக்கணக்கான மின்சார விளக்குகள் எரிகின்றன அல்லவா? இப்படி இருக்கையில், வாழ்க்கையில் இவ்வளவு மாற்றமடைந்துள்ள நம் மக்களின் புத்தி மட்டும் 1,000 ஆண்டுகளுகு முன்பு இருந்ததைப் போன்று இருக்கலாமா?
– தந்தை பெரியார்,
‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’