பா.ஜ.க.வும், ஆர்.எஸ்.எஸ்.சும் அதிகாரத்துக்காக நாட்டையே எரித்து விடும்: ராகுல் சாடல்

1 Min Read

அரசியல்

புதுடில்லி, ஜூலை 28 –  பாஜக, ஆர்எஸ்எஸ் இரண்டும் அதிகாரத்துக்காக நாட்டையே எரித்து விடும் என காங்கிரசு கட்சியின் மேனாள் தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார். 

இளைஞர் காங் கிரஸ் சார்பில் நடந்த நிகழ்ச்சியில் காணொலி மூலம் ராகுல் காந்தி உரையாற்றினார். அப்போது, “பாஜக, ஆர்எஸ்எஸ் இரண்டும் ஆட்சி அதிகாரத்தில் மட்டுமே ஆர்வமாக உள்ளன. அதிகாரத்துக்காக மணிப்பூரை எரிப்பார்கள். நாட்டையே எரிப்பார்கள். அரியானா, பஞ்சாப், உத்தரப்பிரதேசம் எந்த மாநிலமாக இருந்தாலும் அதிகாரத்துக்காக முழு நாட்டையும் விற்று விடுவார்கள். நாட்டின் மீது அன்பு கொண்டு, நாடு புண்படும்போது, நாட்டு மக்கள் துயரப்படும் போது அவர்களும் வருந்துவார்கள். ஆனால் அவர்கள் மனதில் உண்மையில் அப்படியொரு அன்பு, வலி, கவலை இல்லை. மக்களின் வலிகளை உணராமல் பிளவுப்படுத்தும் நோக்கத்தில் இரண்டும் செயல்படுகின்றன” என்று ஆவேசமாக தெரிவித்தார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *