மகளிர் உரிமைத் துறை அமைச்சர் பி.கீதா ஜீவன் அரசுக் கல்லூரி மாணவர்களுக்கான கட்டுரைப் போட்டி

viduthalai
1 Min Read

சென்னை கோட்டூர்புரம், அண்ணா நூற்றாண்டு நூலக வளாகத்தில் நேற்று (09.11.2024) தமிழ்நாடு அரசின் சமூக நீதிக் கண்காணிப்புக் குழு சார்பில், சமூகநீதி நாளை முன்னிட்டு, மாநில அளவில் நடைபெற்ற விழாவில் சமூக நலன் – மகளிர் உரிமைத் துறை அமைச்சர் பி.கீதா ஜீவன் அரசுக் கல்லூரி மாணவர்களுக்கான கட்டுரைப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கி, வாழ்த்து தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் சமூக சீர்திருத்தத் துறை அரசுச் செயலாளர் தெ.சு.ஜவஹர், தமிழ்நாடு மாநிலத் திட்டக்குழு துணைத் தலைவர் முனைவர் ஜெ. ஜெயரஞ்சன், சமூக நீதிக் கண்காணிப்புக் குழு தலைவர் பேராசிரியர் முனைவர் சுப. வீரபாண்டியன், கோ.கருணாநிதி, கவிஞர் மனுஷ்ய புத்திரன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *