மழைக்காலங்களில் உணவுத் தேவைக்காக 3 லட்சம் அரிசி மூட்டைகள் தயார்! கூடுதல் தலைமைச் செயலா்

viduthalai
1 Min Read

சென்னை, நவ.10- மழைக்காலங் களில் உடனடி உணவுத் தேவைக்காக 5 கிலோ அளவிலான 3 லட்சம் அரிசி மூட்டைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக உணவு மற்றும் நுகா்வோர் பாதுகாப்புத்துறை அரசு கூடுதல் தலைமைச் செயலா் ஜெ.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

காஞ்சிபுரம் அருகே முத்தியால் பேட்டையில் கூட்டுறவு மருந்தகம் மற்றும் அங்காடி ஆகியனவற்றை உணவு மற்றும் நுகா்வோர் பாதுகாப்புத் துறையின் கூடுதல் தலைமை செயலாளா் ஜெ.ராதா கிருஷ்ணன் திறந்து வைத்தார்.
பின்னா் அவா் கூறியது.தமிழ்நாடு எல்லையில் அரிசி கடத்தலைத் தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டதில் மொத்தம் 8,394 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு அதன் மூலமாக 997 போ் கைது செய்யப்பட்டுள்ளனா். 74 போ் குண்டா் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனா்.

மழைக்காலத்தில் உணவுத் தேவைக்காக 5 கிலோ அளவிலான அரிசி மூட்டைகள் மொத்தம் 3 லட்சம் தயார் நிலையில் வைக்கப் பட்டுள்ளன. மொத்தம் உள்ள 37,000 நியாய விலைக் கடைகளில் 2,000 கடைகள் தாழ்வான பகுதிகளில் அமைந்துள்ளன.

தாழ்வான பகுதிகளில் உள்ள கடைகளை வேறு இடங்களுக்கு மாற்றும் பணிகளும் நடந்து வருகின்றன.எண்ணெய், பருப்பு ஆகியன வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டதால் தாமதமானது. தற்போது இக்குறை நிவா்த்தி செய்யப்பட்டுள்ளது. கூட்டுறவுத்துறை மூலமாக மொத்தம் ஒரு லட்சம் கோடி கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதுவரை 50,000 கோடிக்கு கடன்கள் வழங்கப்பட்டுள்ளன.

கூட்டுறவு கடன் சங்கங்களை வங்கிகளுக்கு இணையாக மாற்றும் பணிகளையும் செய்து வருகிறோம். தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களை பல்நோக்கு மய்யங்களாக மாற்ற வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியதன்படி அவை படிப்படியாக பல்நோக்கு மய்யங்களாக மாற்றப்பட்டு வருகின்றன.கடந்த 3 ஆண்டுகளில் 16.97லட்சம் புதிய குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டுள்ளது. கடந்த ஆகஸ்ட் 1-ஆம் தேதி முதல் 1.25லட்சம் புதிய குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டுள்ளது என்றார் ராதாகிருஷ்ணன்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *