பெரியார் உலகத்திற்கு நிதி திரட்டி தமிழர் தலைவரிடம் வழங்க அரியலூர் மாவட்ட இளைஞரணி கலந்துரையாடலில் முடிவு!

viduthalai
3 Min Read

அரியலூர், நவ.10- அரியலூர் மாவட்ட திராவிடர் கழக இளைஞரணி கலந்துரையாடல் கூட்டம் 8.11.2024 அன்று மாலை 5 மணியளவில் செந்துறை பெரியார் டிஜிட்டல் ஸ்டுடியோ வளாகத்தில் சிறப்பாக நடை பெற்றது.

நிகழ்ச்சிக்கு மாநில இளை ஞரணி துணைச் செயலாளர் சு.அறிவன் தலைமை ஏற்க அரியலூர் மாவட்ட இளைஞரணி தலைவர் க.கார்த்திக் அனைவரையும் வரவேற்றார். மாவட்ட தலை வர் விடுதலை நீலமேகன். மாநில பகுத்தறிவாளர் கழக அமைப்பாளர் தங்க.சிவமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மாநில இளைஞரணி செய லாளர் நாத்திக. பொன்முடி கூட்டத்தின் நோக்கங்கள்குறித்து விளக்கிப் பேசினார்.
தலைமைக் கழக அமைப்பா ளர் க.சிந்தனைச்செல்வன் சிறப்புரையாற்றினார்.

மாவட்ட இளைஞரணி செய லாளர் லெ.தமிழரசன் நன்றி கூறினார்.

கூட்டத்தில், ஆண்டிமடம் நகர செயலாளர் டி‌.கே.எஸ் அண்ணாமலை அவர்களின் தாயார் அல்லி அம்மையார் மறைவிற்கு இக்கூட்டம் ஆழ்ந்த இரங்கலையும் வீர வணக்கத்தையும் தெரிவிக்கிறது எனவும்,
உலகத் தலைவர் அறிவுலக ஆசான் தந்தை பெரியார் அவர்களின் 146 ஆவது பிறந்த நாள் மகிழ்வாக அரியலூர் மாவட்ட கழக இளைஞரணி சார்பாக ஊராட்சி, நகராட்சி, பேரூராட்சி, கிளைக் கழகங்கள், முழுவதும் கழக இலட்சியக் கொடியை ஏற்றியும் புதிய கிளைக் கழகம் அமைத்து கழக இளைஞரணியை புதுப்பிப்பது எனவும், அரியலூர் கழகம் மாவட்டத்தில் கழக இளை ஞரணி சார்பில் ஏராளமான இடங்களில் தகவல் பதாகை அமைத்தல், துண்டறிக்கை பிரச்சாரம் செய்தல், தெரு முனைப் பிரச்சாரம் செய்தல் பெரியார் பேசுகிறார் நிகழ்வினை தொடர்ச்சியாக நடத்துதல் எனவும்,

டிசம்பர் 02 – தந்தை பெரியாரின் தத்துவ கொள்கை வாரிசு தமிழர் தலைவர் நமது குடும்பத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் 92 ஆம் ஆண்டு பிறந்தநாள் மகிழ்வாக உலகின் ஒரே பகுத்தறிவு நாளே டான ‘விடுதலை’ நாளேட்டை அனைவரிடமும் கொண்டு சேர்க்கும் விதமாக அரியலூர் மாவட்ட கழக இளைஞரணி சார்பில் அதிக அளவில் சந்தாக்களை வழங்கிட முடிவு செய்யப்படுகிறது எனவும்,

நவம்பர் 26 ஈரோட்டில் நடைபெறும் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழாவில் காலை கருத்தரங்கம், கண்காட்சி. மாலை பேரணி, இரவு திறந்த வெளி மாநாடு போன்ற நிகழ்விற்கு அரியலூர் மாவட்ட கழக இளைஞரணி சார்பில் ஏராளமான இளைஞர்களை பங்குபெறச் செய்வது எனவும்,

டிசம்பர் 2 தமிழர் தலை வர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் 92 ஆவது பிறந்த நாள் மகிழ்வாக. பெரியார் உலகத்திற்கு அரியலூர் மாவட்ட இளைஞரணி சார்பில் பெரும் அளவில் நிதி திரட்டி தருவது எனவும்,
டிசம்பர் 2 ‘விடுதலை’ ஆசிரி யர் மானமிகு கி.வீரமணி அவர்களின் 92 ஆவது பிறந்த நாள் மகிழ்வாக அரியலூர் மாவட்டம் முழுவதும் சுவரெழுத்து பிரச்சாரம் விளம்பர தட்டி வைத்து பிரச்சாரம் செய்வதெனவும் தீர்மானிக்கப்பட்டது.

பங்கேற்றோர்

திராவிட மாணவர் கழக சட்டக்கல்லூரி மாநில துணை அமைப்பாளர். சு.ச.திரா விடச்செல்வன். மாவட்ட துணைச் செயலாளர் பொன்.செந்தில்குமார். மாவட்ட இணைச் செயலாளர் இரத்தின.இராமச்சந்திரன். மாவட்ட தொழிலாளரணி தலைவர் வெ. இளவரசன் மாவட்ட தொழிலாளரணி செயலாளர் மா. கருணாநிதி, மாவட்ட விவசாய அணி செயலாளர்

ஆ. இளவழகன், செந்துறை ஒன்றிய தலைவர் மு. முத்தமிழ் செல்வன், ஒன்றிய செயலாளர் இராசா. செல்வகுமார், அரிய லூர் ஒன்றிய தலைவர்

த. செந்தில், ஒன்றிய இளைஞரணி தலைவர் வி.ஜி. மணிகண்டன், செந்துறை தா.மதிய ழகன், செந்துறை நகர செயலா ளர் ப.இளங்கோவன், குழு மூர் சுப்பராயன், எஸ். சுப்பிர மணியன், செ.விக்னேஷ் குமார், மு.ரஜினிகாந்த் ஆகியோர் பங்கேற்றனர்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *