திண்டுக்கல் கழக செயல் வீரர் இரா. நாராயணன் மறைந்தாரே!

1 Min Read

திண்டுக்கல்லின் கழக ‘மூவேந்தர்கள்’ என்று அழைக்கப்படும் (வழக்குரைஞர் சுப்பிரமணி யம், வழக்குரைஞர் மறைந்த சுப.செகந்நாதன் மற்றும் நாராயணன்) தோழர்களுள் ஒருவரான மானமிகு இரா.நாராயணன்
(வயது 80) அவர்கள் இன்று (9.11.2024) மறைவுற்றார் என்ற தகவல் அறிந்து பெரிதும் வருந்துகிறோம்.

இளைய பருவத்திலிருந்து கருஞ்சட்டைத் தோழராக, கழக வீரராக வலம் வந்தவர். தன் மகனை லண்டனுக்கு அனுப்பி சட்ட உயர் கல்வியைப் படிக்க வைத்தவர். அவருக்கு 4 மகள்களும் உண்டு.

திண்டுக்கல்லில் நடைபெற்ற முத்திரைப் பதித்த மாநாடுகளின் வெற்றிக்குப் பெரும் பங்குஆற்றியவர்.
அவரது இழப்பு அவர்தம் குடும்பத்தினருக்கு மட்டுமல்ல, கழகத்திற்கும் பேரிழப்பாகும்.
அவர் பிரிவால் துயருறும் குடும்பத்தினருக்கும், இயக்கத் தோழர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவிப்பதுடன், அவரின் அளப்பரிய இயக்கத் தொண்டினை நினைவு கூர்ந்து வீர வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
சென்னை
9.11.2024

கி. வீரமணி
தலைவர்
திராவிடர் கழகம்

குறிப்பு: மறைவு தகவல் அறிந்ததும் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள் மானமிகு இரா. நாராயணன் அவர்களின் குடும்பத்தாரிடம் தொலைப்பேசியில் தொடர்பு கொண்டு இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்தார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *