‘‘சுயமரியாதை நாள்’’ விழாவினை எழுச்சியுடன் கொண்டாட தென்காசி மாவட்ட கழக கலந்துரையாடலில் முடிவு

1 Min Read

கீழப்பாவூர், நவ.9- தென்காசி மாவட்ட கழக கலந்துரையாடல் கூட்டம் கீழப்பாவூர் பெரியார் திடலில் மாவட்ட தலைவர் வழக்குரைஞர் த.வீரன் தலைமையில் 6.11.2024 அன்று மாலை 5 மணியளவில் நடைப்பெற்றது. கழக காப்பாளர் சீ.டேவிட்செல்லத்துரை சிறப்புரையாற்றினார்.
டிசம்பர் 2 “சுயமரியாதை நாள்” தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் 92 ஆம் ஆண்டு பிறந்தநாள் விழாவினை டிசம்பர் 8 ஆம் தேதியன்று காலை 10 மணியளவில் கீழப்பாவூர் பெரி யார் திடலில் குடும்ப விழாவாக கொண்டாடுவது எனவும், தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் “வாழ்வி யல் சிந்தனைகள்” நூல்களை விளக்கி தென்காசி மாவட்டத்தில் பிரச்சாரக் கூட்டம் நடத்துவது எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இக்கூட்டத்தில் மாவட்ட செய லாளர் கை.சண்முகம், துணைத்தலைவர் ம.செந்தில்வேல், பொதுக்குழு உறுப்பினர் அய்.இராமசந்திரன், மாநில இளைஞரணி துணைச்செயலளர் அ.சவுந்திரபாண்டியன், முத்துக்குமார், இல.அன்பழகன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *