தஞ்சை நாடாளுமன்ற உறுப்பினர் அலுவலகம் திறப்பு விழா கழகப் பொறுப்பாளர்கள் நூல்களை வழங்கி வாழ்த்தினர்!

1 Min Read

தஞ்சாவூர், நவ.9- தஞ்சாவூர் மக்களவை தொகுதி உறுப்பினர் ச.முரசொலி அவர்க ளின் அலுவலகம் திறப்பு விழா கடந்த 7 ஆம் தேதியன்று காலை 10 மணி அளவில் தஞ்சாவூர் இராமநாதன் மருத்துவமனை அருகில் நடைபெற்றது.
தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் அலுவலகத்தைத் திறந்து வைத்தார்.
தமிழ்நாடு அரசு உயர் கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன், மக்க ளவை உறுப்பினர் முரசொலி ஆகியோருக்கு திராவிடர் கழகத்தின் சார்பில் மாநில ஒருங்கிணைப்பாளர் இரா. ஜெயக்குமார், கழக காப்பாளர் மு.அய்யனார், தஞ்சை மாவட்ட தலைவர் வழக்குரைஞர் சி.அமர்சிங், மாவட்ட செயலாளர் அ.அரு ணகிரி, பகுத்தறிவாளர் கழக ஊடகப்பிரிவு மாநில தலைவர் மா. அழகிரிசாமி, தஞ்சை மாநகர தலைவர் பா.நரேந்திரன், தஞ்சை மாநகர செயலாளர் செ. தமிழ்ச்செல்வன், மாநகர இணை செயலாளர் இரா.வீரக்குமார் ஆகியோர் பங்கேற்று அலுவலகத்தில் உள்ள கலைஞர் நூலகத்திற்கு நூல்கள் வழங்கி வாழ்த்துத் தெரிவித்தனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *