இன்று (09.11.2024) மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்கள், அடையாறு மண்டலம், வேளச்சேரி எம்.ஆர்.டி.எஸ். அருகில் உள்ள ரயில்வே சாலை வடக்குப் பகுதியில் வெள்ளப் பாதிப்பைத் தடுத்திடும் வகையில் வெட்டப்பட்டுள்ள குளத்தினைப் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது, மேயர் ஆர்.பிரியா, தென்சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன், திரு.வி.க. நகர் சட்டமன்ற உறுப்பினர் தாயகம் கவி, ஆணையாளர் ஜெ.குமரகுருபரன், துணை ஆணையாளர் (பணிகள்) வி.சிவகிருஷ்ணமூர்த்தி, தெற்கு வட்டார துணை ஆணையாளர் எம்.பி.அமித், மண்டலக்குழுத் தலைவர் துரைராஜ், மாமன்ற உறுப்பினர்கள் வே. ஆனந்தம், பெ. மணிமாறன், எஸ். பாஸ்கரன் மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.