1991ஆம் ஆண்டு இதே நாளில் (நவ. 9) கழகம் நடத்திய போராட்டத்தில் கலந்து கொண்டு இசையின்பன்-பசும்பொன் செந்தில்குமாரி ஆகியோர் சிறை பிடிக்கப்பட்டு, சிறையிலேயே சற்றும் எதிர்பாராத திடீர் நிகழ்வாக ஆசிரியர் அவர்கள் தலைமையில் இணையேற்பை நடத்திக் கொண்டதன் 34ஆம் ஆண்டு மகிழ்வாக நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு நிதியாக ரூ.1000 வழங்கினர்.