ஆதரவற்ற கைம்பெண் சான்று தமிழ்நாடு அரசு விளக்கம்!

viduthalai
1 Min Read

சென்னை, நவ.9- ஆதரவற்ற கைம்பெண் சான்று வழங்குவது குறித்த தெளிவுரையை அனைத்து மாவட்ட ஆட்சியா்களுக் கும் தமிழ்நாடு அரசு வழங்கியுள்ளது.

இதுகுறித்த பிரச்னையை மதுரை மக்களவைத் தொகுதி உறுப்பினா் சு.வெங்க டேசன் அரசின் கவனத் துக்குக் கொண்டு வந்தி ருந்தார்.

அவா் வருவாய்த் துறைக்கு எழுதிய கடிதத்தில், ஆதரவற்ற கைம் பெண்களுக்கு கோட்டாட்சியா் அல்லது சார்-ஆட்சியா் நிலையில் சான்றுகள் வழங்கப் படுகின்றன.

அந்தச் சான்று வழங்கு வதற்கு விண்ணப்பதாரா் எந்தவித துணையும் இல்லாமல் வசிக்க வேண்டும் என்பது போன்ற நிபந்தனைகள் பொருத்த மற்று இருக்கின்றன.

எனவே, அது போன்ற நிபந்தனைகளைத் தளா்வு செய்து எளிதாகச் சான்று கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் என்று கோரியிருந்தார்.

இதற்கு விளக்கம் அளித்து உரிய கடிதத்தை அனைத்து மாவட்ட ஆட்சியா் களுக்கும், வருவாய் நிர்வாக ஆணையா் ராஜேஷ் லக்கானி அனுப்பியுள்ளார்.

அதில் கூறப்பட்டுள்ள தாவது:

ஆதரவற்ற கைம் பெண் சான்று வழங்கு வதற்கு எந்தவித துணை யும் இல்லாமல் வசிக்க வேண்டும் என்று வரை யறை செய்யப்பட்டுள்ளது.

இதனை மகன், மகள் ஆகியோரின் துணை யில்லாமல் இருக்க வேண்டும் என்று பொருள் கொள்ளக் கூடாது.
வாரிசுகள் இருந்தும், வாழ்வாதாரத்துக்கு எந்தவித உதவிகளும் கிடைக்காமல் ஆதரவற்ற நிலையிலேயே கைம்பெண்கள் இருக்கின்றனா் என்றே பொருள்படும். எனவே, இந்த அறிவுறுத்தலை பின்பற்றி, ஆதரவற்ற கைம்பெண் சான்று வழங்க சார் நிலை அலுவலா்களுக்கு தக்க அறிவுரை வழங்க வேண்டும் என்று அதில் கூறியுள்ளார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *