துரை வைகோ அவர்களின் மகள் வானதி ரேணு – கோகுலகிருஷ்ணன் ஆகியோரது திருமண விழா

1 Min Read

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான வைகோ அவர்களின் பெயர்த்தியும், ம.தி.மு.க. முதன்மைச் செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ அவர்களின் மகள் வானதி ரேணு – கோகுலகிருஷ்ணன் ஆகியோரது திருமணம் நேற்று (07.11.2024) காலை சென்னை, திருவேற்காட்டில் நடைபெற்றது. தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களும், பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி அவர்களும் நேற்று (07.11.2024) மாலை சென்னை, அண்ணா நகர் வைகோவின் இல்லத்திற்கு வருகை தந்து மணமக்களுக்கு பூங்கொத்து கொடுத்து வாழ்த்துத் தெரிவித்தனர். ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ அவர்களும், ம.தி.மு.க. முதன்மைச் செயலாளர் துரை வைகோ அவர்களும் துணை முதலமைச்சர் அவர்களை சால்வை அணிவித்து வரவேற்றனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *