நல்லிணக்கத்துக்காக பாடுபடுவோருக்கு கோட்டை அமீர் பதக்கம்: விண்ணப்பிக்க அரசு அழைப்பு

1 Min Read

சென்னை, நவ. 8- மத நல்லிணக்கத்துக்காகப் பாடுபடுவோருக்கான கோட்டை அமீா் பதக்கம் பெற விண்ணப்பிக்கலாம் என்று தமிழ்நாடு அரசு அழைப்பு விடுத்துள்ளது. மத நல்லிணக்கத்துக்குப் பாடுபட்டு உயிர்நீத்த கோவையைச் சோ்ந்த கோட்டை அமீரின் பெயரால், கோட்டை அமீா் மத நல்லிணக்கப் பதக்கம் வழங்கப்பட்டு வருகிறது. ஆண்டுதோறும் குடியரசு நாளன்று வழங்கப்படும் இந்த விருது ரூ.25,000 காசோலை, ஒரு பதக்கம், தகுதியுரை ஆகியவற்றை உள்ளடக்கியது. நிகழாண் டில் இந்த விருதுக்கு விண்ணப்பிக்கலாம். இதற்கு வயது வரம்பில்லை.

விண்ணப்பங்களை மாவட்ட ஆட்சியா்கள் மூலமாகவோ அல்லது அரசு இணையதளத்தின் வழியாகவோ பெறலாம். பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அரசு செயலா், பொதுத் துறை, தலைமைச் செயலகம், சென்னை – 600 009 என்ற முகவரிக்கு வரும் 25-ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும். உரிய காலத்துக்குள் பெறப்படாத விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும் என தமிழ்நாடு அரசு புதன்கிழமை விடுத்த செய்திக் குறிப்பில் தெரி விக்கப்பட்டுள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *