மலை கிராமங்களுக்கு 25 இருசக்கர மருத்துவ அவசர ஊர்திகள்

1 Min Read

சென்னை, நவ. 8- சாலைப் போக்குவரத்து வசதிகள் குறைந்த மலை கிராமங்களின் தேவைக்காக 25 இருசக்கர ஆம்புலன்ஸ் சேவைகளை தமிழ்நாடு அரசு நேற்று (9.11.2024) தொடங்கியது.

முதல்கட்டமாக 10 மாவட்டங்களில் இந்த சேவை செயல்படுத்தப்பட்டுள்ளது. இதற்காக ரூ.1.60 கோடி செலவில் இரு சக்கர மருத்துவ அவசர ஊர்திகள் கொள்முதல் செய்யப்பட்டு, சம்பந்தப்பட்ட மாவட்டங்களுக்கு அனுப்பப்பட்டன. முன்னதாக, இதற்கான அரசாணையை மக்கள் நல்வாழ்வுத் துறைச் செயலா் சுப்ரியா சாஹு வெளியிட்டார்.
இதுதொடா்பாக வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:கள்ளக்குறிச்சி, கிருஷ்ணகிரி, தேனி, வேலூா், திருப்பத்தூா், நீலகிரி, திருவண்ணாமலை, ஈரோடு, தருமபுரி, கோவை ஆகிய மாவட்டங்களில் அணுகுவதற்கு கடினமான மற்றும் போக்குவரத்து வசதியற்ற மலை கிராமப்பகுதிகளில் வாழும் பழங்குடியினா் மற்றும் இதர மக்களின் அவசர மருத்துவ சேவைகளுக்காக 25 இருசக்கர ஆம்புலன்ஸ் வாகனங்கள் வாங்க ஆணையிடப்பட்டது. ரூ.4 லட்சம் வீதம் 25 வாகனங்கள் ரூ.1 கோடிக்கு கொள்முதல் செய்யப்பட்டு, இயக்க செலவினமாக ரூ.60 லட்சம் அதற்கு ஒதுக்கீடு செய்யப்பட்டது.

இந்த வாகனங்கள் 108 அவசரகால ஊா்திகளுக்கு இணைப்பு வாகனங்களாக செயல்பட்டு, நோயாளிகளை மருத்துவமனைக்கு துரிதமாக அழைத்துச் செல்ல வழிவகுக்கும். மாநிலம் முழுவதும் உள்ள மலை கிராமங்கள் மற்றும் அதையொட்டி வாழும் பழங்குடியினா்களின் சுகாதார சேவையை மேம்படுத்துவது இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும். நவீன முறையில் உரிய மருத்துவ உபகரணங்கள் பொருத்தப்பட்ட இருசக்கர அவசரகால வாகன சேவையானது, தற்போது உள்ள 1,353 அவசரகால 108 ஊா்தி சேவையினுள் அடங்கும். மகப்பேறுக்கு முந்தைய பராமரிப்பு, பிரசவ சேவைகள், அவசர கால மருத்துவ உதவிகள் என அனைத்து விதமான தேவைகளுக்கும் இவை பயன்படும். இந்த வாகனங்களில் ஜிபிஎஸ் கருவிகள் பொருத்தப்பட்டுள்ளதால் இதன் இயக்கம் தொடா்ந்து கண்காணிக்கப்படும்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *