அர்ச்சகர் நியமனத்தில் ஜாதிக்கு எந்த பங்கும் இல்லை, யார் வேண்டுமானாலும் அர்ச்சகர் ஆகலாம் : சென்னை உயர்நீதிமன்றம்

1 Min Read

அரசியல்

சென்னை,ஜூலை28- அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற தனி நீதிபதியின் தீர்ப்புக்கு இடைக்காலத் தடை விதிக்க சென்னை உயர்நீதி மன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.

அர்ச்சகர் நியமனத்தில் ஜாதிக்கு எந்த பங்கும் இல்லை, யார் வேண்டுமானாலும் அர்ச்சகர் ஆகலாம் என்ற தனி நீதிபதியின் தீர்ப்புக்கு இடைக்காலத் தடைவிதிக்கக் கோரிய வழக்கில் இன்று (28.7.2023) சென்னை உயர்நீதிமன்றம் தனி நீதிபதியின் தீர்ப்புக்கு இடைக்காலத் தடைவிதிக்க மறுப்பு தெரிவித்துள்ளது.

சேலம் சுகவனேசுவரர் கோயிலில் அர்ச்சகர் நியமனத்துக்கு விண்ணப்பங்கள் வரவேற்றதை அடுத்து, அர்ச்சகர் நியமனத்துக்கு எதிராக சுப்ர மணிய குருக்கள் என்பவர் தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிபதி ஆனந்த வெங்கடேசன் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். 

தனி நீதிபதியின் தீர்ப்புக்கு இடைக்காலத் தடைவிதிக்கக் கோரிய சுப்ரமணிய குருக்களின் மேல்முறையீட்டு மனுமீதான விசாரணை இன்று (28.7.2023) சென்னை உயர்நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி கங்காபூர்வாலா, நீதிபதி ஆதிகேசவலு அமர்வு முன்பாக  விசாரணைக்கு வந்தது. 

அப்போது தனிதீபதியின் தீர்ப்புக்கு இடைக்காலத் தடைவிதிக்க முடியாது என்று சென்னை உயர்நீதி மன்ற அமர்வு உத்தரவு பிறப்பித்தது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *