பனியில்லா மலை

1 Min Read

ஜப்பானின் உயரமான மலைச்சிகரம் புஜி. இதன் உயரம்12,388 அடி. தலைநகர் டோக்கியோவில் இருந்து 100 கி.மீ., தொலைவில் உள்ளது. உலகில் இருந்து ஆண்டுக்கு 2 லட்சம் பேர் இச்சிகரத்தில் மலையேற்றம் செய்கின்றனர். ஆண்டுதோறும் அக்டோபர் 1 – 5க்குள்இச்சிகரம் பனிப்படலத்தால் மூடப்படும். இந்நிலையில் 130 ஆண்டுகளில் முதன்முறையாக இம்முறை முற்றிலும் பனியில்லாத மலையாக காட்சிஅளிக்கிறது. பருவநிலை மாற்றத்தின் விளைவாக ஜப்பானில் சில மாதங்களாக வெப்பநிலை அதிகமாக இருப்பதே இதற்கு காரணம்.

பூமி நீலநிறமாக தெரிவது ஏன்?

வானம் ஏன் நீல நிறமாக இருக்கிறது என்பதை கண்டுபிடித்தவர் நோபல் பரிசு வென்ற சர்.சி.வி.ராமன். நிறப்பிரிகை காரணமாக சூரிய ஒளியில் இருந்து வரும் நிறங்களில் நீல நிறம் தவிர மற்ற நிறங்களை துாசி மண்டலம் கிரகித்து கொள்வதால் வானம் நீல நிறமாக காட்சியளிக்கிறது என நிரூபித்தார். அதன்படி வெளியிலிருந்து பூமியைக் காண நேர்ந்தால், வானத்தின் நீலம், பூமியின் 70 சதவீதம் படர்ந்திருக்கும் கடல் நீர் மண்டலம், அந்த நீல நிறத்தை பிரதிபலிக்கிறது. அதனால் விண்வெளியில் இருந்து பார்த்தால் பூமி நீல நிறமாக தோற்றமளிக்கிறது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *