சேவை நோக்கில் பயணிக்கிறது போக்குவரத்துத் துறை – லாப நோக்கில் அல்ல அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர் தகவல்

2 Min Read

அரியலூர், நவ.7 “போக்குவரத்துத்துறை நிதிநிலை மேம்பட வாய்ப்பில்லை. இது பொதுமக்களுக்கான சேவை துறையாக செயல்பட்டு வருகிறது. அதில் லாப நோக்கம் இல்லை” என்று போக்கு வரத்துத்துறை அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர் தெரிவித்துள்ளார்.

அரியலூரில் திமுக மாவட்ட செயல்வீரர்கள் கூட்டம் நேற்று (6.11.2024) நடைபெற்றது. கூட்டத்தில் கலந்து கொண்ட போக்குவரத்துத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் செய்தியா ளர்களிடம் கூறியதாவது: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நவ.15-ஆம் தேதி அரிய லூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அடுத்த மகிமைபுரம் கிராமத்தில் சிப்காட் தொழிற்பேட்டைக்கு அடிக்கல் நாட்டி தொடங்கி வைக்க இருக்கிறார். தொடர்ந்து, அரியலூரில், பெரம்ப லூர் – அரியலூர் மாவட் டங்களைச் சேர்ந்த மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார். பின்னர், பெரம்பலூரில் கட்சி நிர்வாகிகளை சந் திக்கிறார்.

தீபாவளியை பொறுத்தவரை கடந்த 2 ஆண்டுகளாக எந்த ஒரு சிக்கலும் இல்லா மல் பொதுமக்கள் பேருந்துகளில் பயணம் மேற்கொண்டுள்ளனர். இந்தாண்டு மற்ற பகுதிகளில் இயக்கப்படும் பேருந்துகளை மாற்றி சென்னைக்கு அனுப்பிவைப்பது முற்றிலும் தவிர்க்கப்பட்டு, தனியார் பேருந்துகள் ஒப்பந்த அடிப்படையில் இயக்கப்பட்டன.

இந்தாண்டில் 5.75 லட்சம் பேர் சென்னையிலிருந்து சொந்த ஊர்களுக்கு தீபாவளிக்கு பயணித்துள் ளனர். கடந்தாண்டு 1.10 லட்சம் பேர் முன்பதிவு செய்து பயணித்தனர். அதுவே இந்த ஆண்டில் 1.52 லட்சம் பேர் முன்பதிவு செய்து பயணித்துள்ளனர். சொந்த ஊர்களுக்குச் சென்றவர்கள் கடந்த 3-ஆம் தேதி ஒரே நாளில் 75 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் முன்பதிவு செய்து பயணித்தனர். இது தமிழக போக்குவரத்துத்துறை வரலாற்றில் இதுவரை இல்லாத முன்பதிவாகும்.
அரசின் இந்த செயல் பாடு பொதுமக்களால் பாராட்டப்பட்டு வருகி றது. போக்குவரத்துத்துறை நிதிநிலை மேம்பட வாய்ப்பில்லை. இது பொதுமக்களுக்கான சேவை துறையாக செயல்பட்டு வருகிறது. இதில் லாப நோக்கம் இல்லை. டீசல் விலை கடுமையாக உயர்ந்தபோதும், மற்ற மாநிலங்களில் பேருந்து கட்டணம் உயர்ந்த நிலையில், தமிழகத்தில் பேருந்து கட்டணம் உயர்த்தப்படவில்லை. மேலும், மகளிருக்கு கட்டணமில்லா பயணம், மாணவ – மாணவியருக்கு இலவச பயண அட்டை – இவை அனைத்துக்குமான தொகையை தமிழ்நாடு முதலமைச்சர் அளித்து வருகிறார்.இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *