தீங்கு செய்த தீபாவளி பட்டாசு வெடித்ததில் நான்கு குழந்தைகளுக்கு கண்கள் அகற்றம்

viduthalai
1 Min Read

மதுரை, நவ.7- தீபாவளியன்று பட்டாசு வெடித்ததில் கண்களில் பாதிப்பு ஏற்பட்டு, 4 குழந்தைகளுக்கு கண்கள் அகற்றப்பட்டுள்ளன.

மதுரையில் தீபாவளியின்போது பட்டாசு வெடித்ததில் குழந்தைகளுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதில் கண் சார்ந்த பாதிப்புகளும் உள்ளன. இதில் 4 குழந்தைகளுக்கு கண் அகற்றப்படும் நிலை ஏற்பட்டு இருப்பதாக மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை தெரி வித்துள்ளது.

தீபாவளியையொட்டி பட்டாசு வெடித்ததால் ஏற்பட்ட கண் பாதிப்பு தொடர்பாக மொத்தம் 104 பேர் சிகிச்சைக்கு அந்த மருத்துவமனைக்கு வந்தனர்.

கண்கள் அகற்றம்

அவர்களுக்குப் பல்வேறு சிகிச்சைகள் அளிக்கப்பட்டன. அதில் 10-க்கும் மேற்பட்டவர்களுக்கு கருவிழியில் பாதிப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் தொடர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
இதில் 4 குழந்தைகளுக்கு முற்றி லும் கண் பாதிப்பு ஏற்பட்டு கண்கள் அகற்றப்பட்டுள்ளன என அந்த மருத்துவ மனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *