2026 லும் திமுகவே ஆட்சி அமைக்கும் மக்கள் வரவேற்பே அதற்குச் சாட்சி! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேட்டி

viduthalai
2 Min Read

கோவை, நவ. 7 மக்களின் வர வேற்பே சாட்சியாக இருப்பதால் 2026 இல் மீண்டும் தி.மு.க. ஆட்சி அமைவது உறுதி என்று கோவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

கோவையில் அரசு நிகழ்ச் சியில் பங்கேற்பதற்காக நேற்று முன்தினம் (5.11.2024) காலை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வந்தார். பின்னர் அவர் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். மாலையில் கோவை போத்தனூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் கட்சி நிர்வாகிகளுடன் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. ஆலோசனை வழங்கினார்
இரவு 7 மணிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூட்டம் நடைபெறும் மண்டபத்துக்கு வந்தார். தொடர்ந்து அவர் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோ சனை நடத்தினார்.

இதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-

நாடாளுமன்றத் தேர்தல் வெற்றி கொடுத்திருக்கும் உற்சாகத்தோடு, வரும் சட்டமன்றத் தேர்தலில் நாம் முழுமையான வெற்றியைப் பெற வேண்டும். நம்முடைய கட்சிக்கு உள்ள கட்டமைப்பு தமிழ்நாட்டில் வேறு எந்த கட்சிக்கும் கிடையாது. நாம் நினைத்தால் எந்தச் செய்தியையும் தமிழ்நாட்டு மக்களிடம் உடனடியாக கொண்டு சேர்க்க முடியும். எனவே நமது சாதனைப் பணிகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் பணிகளைச் செய்ய வேண்டும்.

இளைஞர்களிடம் கொள்கைகளை விதைப்பதுதான் மிகமுக்கியம். அவர்கள்தான் எதிர்காலத்துக்கான விதைகள். எனவே, பேச்சாளர்களை அழைத்து பாசறைக் கூட்டங்களை நடத்துங்கள். ஒவ்வொரு பகுதியிலும் கொள்கை வீரர்களாக 10 முதல் 15 இளைஞர்களை உரு வாக்க வேண்டியது உங்கள் ஒவ்வொருவரின் கடமை.

200 தொகுதிகளில் வெற்றி

கோவை மாவட்டத்துக்கு உட்பட்ட 10 சட்டமன்றத் தொகுதிகளையும் தி.மு.க. கூட்டணி கைப்பற்றியாக வேண்டும். அதற்கான முதல் சந்திப்பு தான் இந்தக் கூட்டம். 2026 சட்டமன்ற தேர்தலிலும் நாம்தான் ஆட்சிக்கு வரப் போகிறோம். அது சாதாரண வெற்றியாக இருக்கக் கூடாது. நான் ஒரு இலக்கு கொடுத்திருக்கிறேன்.

200 தொகுதிகளில் வெற்றி என்பது தான் அந்த இலக்கு. அதனால் உங்கள் மாவட்டத் தில் இருக்கும் 10 தொகுதிகளுக்கும் நீங்கள்தான் பொறுப் பேற்றுக்கொள்ள வேண்டும். எழுச்சிமிகு தி.மு.க. ஏழாவது முறையும் ஆட்சியைப்பிடிக்க எந்தாளும் உழைப்போம். இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டா லின் போனார்.

கூட்டம் முடிந்ததும் இரவு 8.15 மணிக்கு திருமண மண்டபத்தை விட்டு வெளியேவந்த முதலமைச்சர் மு.கஸ்டாலின் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார்.

அப்போது அவரிடம் செய்தியா ளர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் விவரம் வருமாறு:-
2026 இல் மீண்டும் தி.மு.க.ஆட்சி

கேள்வி: தங்கநகைதொழிலாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை வைத்து இருக்கிறார் களே அவை நிறைவேற்றப்ப டுமா?.
பதில்: தங்க நகை தொழிலாளர்கள் பலகோரிக்கைகள் வைத்து உள்ளனர். அந்த கோரிக்கைகள் கண்டிப்பாக நிறைவேற்றி தரப்படும். தங்க நகை பூங்கா அமைப்பது தொடர்பான கோரிக்கை நிச்சயமாக பரிசீலிக்கப்படும்.
கேள்வி: கோவை மக்களின் வரவேற்பு எப்படி இருந்தது?.
பதில்: கோவை மக்களின் வரவேற்பு மிகவும் சிறப்பாக இருந்தது. 2026 ஆம் ஆண்டில் மீண்டும் தி.மு.க. ஆட்சிதான் என்பதை உறுதிப்படுத்தும் விதமாக மக்களின் வரவேற்பே சாட்சியாக உள்ளது.
வெளியே சொல்ல முடியாது
கேள்வி: கட்சி ரீதியாக கோவை மாவட்டத்தை விரிவுப்படுத்த திட்டம் உள்ளதா?.
பதில்: கட்சி முடிவு செய்யக்கூடிய விஷயங்களை வெளியே சொல்ல முடியாது.
-இவ்வாறு அவர் பதிலளித்தார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *