தருமபுரி, நவ.7- தருமபுரியில் தந்தை பெரியார் சிலையின் கீழ் மணமக்கள் ச.சந்தோஷ்குமார்-த. தாணு ஆகியோரின் புரட்சிகரமான மணவிழாவை தலைமைக் கழக அமைப்பாளர் ஊமை. ஜெயராமன் நடத்தி வைத்தார்!
தருமபுரி மாவட்டம் மாரவாடி சங்கர்-சாந்தி அவர்களின் மகன் ச.சந்தோஷ்குமார், தருமபுரி மாவட்டம் வேப்பிலைப்பட்டி தமிழரசு-கலைவாணி அவர்களின் மகள் சு.தானு ஆகியோரின் இல்வாழ்க்கை ஒப்பந்த விழா 4 -11-2024 ஆம் தேதி திங்கட்கிழமை காலை 10 மணி அளவில் தருமபுரியில் உள்ள தந்தை பெரியார் சிலையின் கீழ் நடைபெற்றது. மணவிழாவிற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில அமைப்பு செயலாளர் கி.கோவேந்தன் தலைமை ஏற்க, மணமகளின் தந்தை சு.தமிழரசு வரவேற்பு உரையாற்றினார்.
திமுக ஒன்றிய தலைவர் மு.சக்கரை, மேனாள் ஊராட்சி மன்ற தலைவர் சின்ன பாப்பா, கிராம உதவியாளர் ஊமை. காந்தி, சின்னபாப்பா, ஊமை. கணேசன், மகேஸ்வரி, ஊமை. அர்ஜுனன், சகுந்தலா, ஊமை பீமன் அருணா, மாதம்மாள் மணி, ஆகியோர் முன்னிலையேற்றனர். மணமக்கள் சந்தோஷ்குமார் தாணு ஆகியோர் இணைந்து தோழர்கள் கொள்கை முழக்கமிட தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவித்தனர். மணவிழாவை தலைமை கழக அமைப்பாளர் ஊமை.ஜெயராமன் மணமக்களுக்கு உறுதிமொழி கூறி மணவிழாவை நடத்தி வைத்தார், தோழர்களும் உறவினர்களும் அனைத்துக் கட்சி தோழர்களும் மணமக்கள் வாழ்க, தந்தை பெரியார் வாழ்க, அன்னை மணியம்மையார் வாழ்க, தமிழர் தலைவர் ஆசிரியர் வாழ்க, சுயமரியாதைத் திருமணம் வாழ்க, பகுத்தறிவு திருமணம் வாழ்க என வாழ்த்து முழக்கம் இட்டனர்.
வாழ்த்துரை
அதைத்தொடர்ந்து 11 மணியளவில் ரயில்வே திருமண மண்டபத்தில் வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. மணவிழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் மாநில மகளிர் அணி செயலாளர் தகடூர் தமிழ்ச்செல்வி தந்தை பெரியார் புத்தகங்களை வழங்கி சிறப்பித்தார். நிகழ்ச்சியை மேனாள் மாவட்ட செயலாளர் பெ.கோவிந்தராஜ் ஒருங்கிணைத்து நடத்தினார் .விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில அமைப்பு செயலாளர் கி.கோவேந்தன், திமுக ஆதிதிராவிடர் நலக்குழு மாநில துணை செயலாளர் அரூர் சா.இராஜேந்திரன், சேலம் ஆர்.ஜெயவேல், மாநில மகளிர் அணி செயலாளர் தகடூர் தமிழ்ச்செல்வி, மாநில பகுத்தறிவு கலைத்துறை செயலாளர் மாரி கருணாநிதி, மாநில இளைஞரணி துணை செயலாளர் மா.செல்லதுரை, மாவட்ட கழக தலைவர் கு.சரவணன், மாவட்ட செயலாளர் பீம. தமிழ்பிரபாகரன், அரூர் மாவட்ட தலைவர் அ. தமிழ்ச்செல்வன், கிருஷ்ணகிரி மாவட்ட தலைவர் கோ. திராவிடமணி, செயலாளர் செ.பொன்முடி, ஓசூர் மாவட்ட தலைவர் சு.வனவேந்தன், மாவட்ட பகுத்தறிவாளர் கழக செயலாளர் இர. கிருஷ்ணமூர்த்தி, வத்தலகுண்டு பாண்டியன், கவிஞர் கீரை பிரபாகரன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மண்டல பொறுப்பாளர் மின்னல் சக்தி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
தருமபுரி நகரில் முக்கிய இடங்களில் பெரியார் சிலையின்கீழ் நடைபெறும் புரட்சித் திருமணம் என பேனர் வைத்திருந்ததை பார்த்த பொதுமக்கள் வியப்படைந்து சென்றனர். மதச் சடங்குகள் ஏதுமின்றி மிக எளிய முறையில் புரட்சிகரமான வகையில் சிறப்பாக நடைபெற்றது.
மணவிழாவில் கழகப் பொறுப் பாளர்கள் பொதுக்குழு உறுப்பினர் கதிர், மேனாள் மாவட்ட தலைவர் மு.பரமசிவம், மேனாள் மாவட்ட செயலாளர் சி.காமராஜ், மாவட்ட விவசாய அணி தலைவர் மு.சிசுபாலன், மாவட்ட தொழிலாளர் அணி செயலாளர் மாஸ்டர் மாணிக்கம், கிருஷ்ணகிரி மாவட்ட இளைஞரணி தலைவர் ராஜேஷ், ஓசூர் மாவட்ட செயலாளர் சின்னசாமி, நகரத் தலைவர் கரு பாலன், ராமசாமி, சின்னசாமி, தீ. ஏங்கல்ஸ், சுபா, ஆதிரை, கலையமுதன்,மருத்துவர்கள் சந்திரபோஸ் அம்பேத்கர், ஆர்த்தி, மருத்துவர் கனிமொழி, மகளிர் அணி க.உமா, பெ.கல்பனா, ம. சுதா, பிரகாஷ், கருணாநிதி, மற்றும் கழகத் தோழர்கள் உறவினர்கள் பங்கேற்றனர். நிறைவாக மாவட்ட இளைஞரணி தலைவர் கருஞ்சட்டை முனியப்பன் நன்றி கூறினார்.