கன்னியாகுமரி மாவட்டம் செண்பகராமன் புதூரில் பெரியாரியல் பயிற்சிப் பட்டறை 75 மாணவர்களுடன் தொடங்கியது

viduthalai
1 Min Read

திராவிடர் கழகம்

ஆரல்வாய்மொழி, நவ.6 கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய் மொழி,செண்பகராமன் புதூரில் இன்று (6.11.2024) காலை 10.30 மணி அளவில் பெரியாரியல் பயிற்சிப் பட்டறை கன்னியாகுமரி மாவட்ட திராவிடர் கழகத்தின் சார்பில் தொடங்கி நடைபெற்று வருகிறது.

பெரியாரியல் பயிற்சிப் பட்டறை தொடக்க விழா நிகழ்ச்சிக்கு கன்னியாகுமரி மாவட்ட திராவிடர் கழக தலைவர் மா.மு. சுப்பிரமணியம் தலைமை ஏற்று உரையாற்றினார். மாவட்டச் செயலாளர் கோ.வெற்றிவேந்தன் அனைவரையும் வரவேற்று உரையாற்றினார். பொதுக்குழு உறுப்பினர் தயாளன், மாவட்டத் துணைச் செயலாளர் அய்சக் நியூட்டன், இந்திரா மணி, மணிமேகலை கல்லூரி நிதி அலுவலர் பெணில் ,எம்.இ. டி பொறியியல் கல்லூரி முதல்வர் எழில் தினேகா, கல்வியியல் கல்லூரி முதல்வர் முனைவர் ஆர்.சிறீலதா ஆகியோர் முன்னிலை ஏற்றனர்.

திராவிடர் கழக மாநில ஒருங்கிணைப்பாளர் இரா. குணசேகரன் பயிற்சிப் பட்டறையை தொடங்கி வை.த்து உரையாற்றினார். எம்.இ.டி கல்லூரி நிறுவனங்களின் செயல் அதிகாரி முனைவர் கோ. மகாதேவன் வாழ்த்துரை வழங்கினார். பயிற்சிப் பட்டறை நடைபெறு வதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்து முழு ஒத்துழைப்பு வழங்கி சிறப்பித்தார்.

பகுத்தறிவாளர் கழக ஊடகப்பிரிவு மாநில தலைவர் ஓய்வு பெற்ற கல்வி அதிகாரி மா.அழகிரிசாமி தந்தை பெரியாரின் வாழ்க்கை வரலாறு என்ற தலைப்பில் முதல் வகுப்பினை தொடங்கினார். சமூக நீதி வரலாறு என்ற தலைப்பில் பகுத்தறிவு எழுத்தாளர் மன்ற மாநில தலைவர் முனைவர் வா.நேரு, இந்திய அரசியல் சட்டம் 51 A (H) வலியுறுத்தும் அறிவியல் மனப்பான்மை, பெரியாரின் பெண்ணுரிமை சிந்தனைகள் ஆகிய தலைப்புகளில் கழகத் துணைப் பொதுச் செயலாளர் ச.பிரின்சு என்னாரெசுபெரியார், மந்திரமா? தந்திரமா? அறிவியல் விளக்கம் என்ற தலைப்பில் ஈட்டி கணேசன் ஆகியோர் தொடர்ந்து வகுப்பு எடுத்த திராவிடர் கழக மாநில ஒருங்கிணைப்பாளர் – பெரியாரியல் பயிற்சிப் பட்டறை ஒருங்கிணைப்பாளர் இரா. ஜெயக்குமார் பயிற்சிப் பட்டறையை ஒருங்கிணைத்து நடத்தினார்

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *