திருவனந்தபுரம் பத்மநாப சாமி கோயிலுக்கு ஒன்றிய அரசு நோட்டீஸ்! உடனடியாக ரூ.1.57 கோடி ஜி.எஸ்.டி. கட்ட வேண்டுமாம்

viduthalai
1 Min Read

திருவனந்தபுரம், நவ.5- மோடி தலைமையிலான பாஜக ஆட்சிக்கு வந்ததிலிருந்தே எல்லாப் பொருட்கள் மீதும் ஜி.எஸ்.டி வரியை விதித்து வருகிறது. இதனால் உணவு உள்ளிட்ட அனைத்து பொருட்களின் விலைகளும் கடுமையாக உயர்ந்து வருவது சாமானிய மக்களைப் பாதித்துள்ளது.

தற்போது இந்தியா கடும் பொருளா தார நெருக்கடியில் இருந்து வரும் நிலையில், அரசி, பருப்பு, பால் உள் ளிட்ட பொருட்களுக்கு ஜி.எஸ்.டி வரி விதித்துள்ளது. மேலும் பல பொருள்களுக்கு ஜி.எஸ்.டி வரியை அதிகரித்துள்ளது. இதனால் அத்தியாவசிய பொருள்களின் விலையும் அதிகளவில் உயர்ந்துள்ளது. இந்த நிலையில், பிரபலமான திருவனந்தபுரம் பத்மநாப சாமி கோயிலுக்கு ஒன்றிய அரசு ஜி.எஸ்.டி. தாக்கீது அனுப்பியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து ஒன்றிய அரசு சார்பில் அனுப்பட்ட ஜி.எஸ்.டி. தாக்கீதில் கோவில் வருமானத்துக்காக ஜி.எஸ்.டி. 1.57 கோடி ரூபாய் கோரப்பட்டு உள்ளது. கோயில் சொத்துக்களின் வாடகை, சிற்பங்கள், இதர பொருள்களின் விற்பனை, கோயில் யானைகளை வாடகைக்கு விடுவது போன்ற வருவாய்க்கு 1.57 கோடி ரூபாய் ஜி.எஸ்.டி செலுத்த வேண்டும் என்றும், ஜி.எஸ்.டி நிலுவை தொகையை செலுத்தாவிட்டால் 100% அபராதம், 18% வட்டி செலுத்த நேரிடும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ‘

அதே நேரம் முறையான கணக்குகள் படி 16 லட்சம் ரூபாய்தான் செலுத்த வேண்டும். அதில்3 லட்சம் ரூபாய் ஏற்கெனவே செலுத்தியுள்ளதாக கோயில் நிர்வாகம் கூறியுள்ளது. கோவில் வருமானத்துக்கு கூட ஜி.எஸ்.டி. கட்டவேண்டும் என்று தாக்கீது அனுப்பிய செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *