சென்னை, நவ. 5- தமிழ் நாட்டில் நடப்பாண்டு புதிதாக 75,702 பேருக்கு காசநோய் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
நாட்டில் காச நோயை முழுமையாக ஒழிக்கும் நோக்கில் ஒன்றிய, மாநில அரசுகள் பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகின்றன. 2025ஆம் ஆண்டுக்குள் காசநோயை முற்றிலும் ஒழிக்க வேண்டும் என்ற இலக்குடன் பல்வேறு திட்டங்கள் செயல் படுத்தப்படுகின்றன.
மாநிலம் முழுவதும் காச நோயாளிகளுக்கு தேவைப்படும் மருந்துகள் களப்பணியாளர்கள் மூலம் வீடுகளுக்கே சென்று வழங்கப்படுகின்றன. வீடுகளிலேயே சளி மாதிரி எடுக்கப்பட்டு, தேவைப் படுபவர்களுக்கு நடமாடும் ‘ஸ்கேன்’ கருவிகள் வீடுகளுக்கு அனுப்பி ‘ஸ்கேன்’ எடுக்கப்படுகிறது.
இதுபோன்ற நடவடிக்கைகளால், இந்நோயின் தாக்கத்தால் பாதிக் கப்படுபவர்களில், 84 சதவீதம் பேர் முதல் சிகிச்சையில் குணப்படுத்தப் படுகின்றனர். தொடர் சிகிச்சைகள் மூலம் மீதமுள்ளவர்கள் குண மடைந்து வருகின்றனர்.
இந்நிலையில், நடப்பாண்டு நாடு முழுவதும் தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளில் காசநோய் பாதிப்புடன் அனுமதிக்கப்பட்டவர்களின் தரவுகளை சுகாதாரத் துறை ஆய்வு செய்தபோது, 21 லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு அந்நோய் இருந்தது கண்டறியப்பட்டது.
தமிழ்நாட்டில் 75,702 பேருக்கு காசநோய் பாதிப்பு இருந்தது. அவர்களில், தனியார் மருத்துவ மனைகளில் 24,685 பேரும், அரசு மருத்துவமனைகளில் 50,837 பேரும் முதல் கட்ட சிகிச்சை பெற்றுள் ளனர்.
கடந்தாண்டு இதே காலகட்டத்தில் தமிழ்நாட்டில் எண்ணிக்கை, 3 விழுக்காடு அதிக மாக இருந்தது குறிப்பிடத்தக்கது என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.