கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்

1 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

5.11.2024
டெக்கான் கிரானிக்கல், சென்னை:
* இந்தியாவில் சக்தி வாய்ந்த டாப்-10 மனிதர்கள் பட்டியலில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு 8ஆவது இடம் வழங்கப்பட்டுள்ளது. இந்தியா டுடேவின் நவம்பர் மாத இதழில் இந்தியாவின் அதிகார சபை என்ற தலைப்பில் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. மோடி, அமித் ஷா, மோகன் பகவத் என நீளும் பட்டியலில் 5 மாநில முதலமைச்சர்கள் மட்டுமே இடம்பெற்றுள்ளனர்.
டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:
*மக்கள் தொகை மற்றும் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த மோடி அரசுக்கு அழுத்தம் அதிகமாகியுள்ளது என்கிறார் கட்டுரையாளர் சிகா முகர்ஜி.
* தெலங்கானாவில் ஜாதிவாரி கணக்கெடுப்பை பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் மற்றும் நீதிமன்ற உத்தரவின்படி அமைக்கப்பட்ட ஓய்வு பெற்ற அய்.ஏ.எஸ். அதிகாரி பூசானி வெங்கடேஷ்வர ராவ் தலைமையிலான குழு, இரண்டும் நடத்தும்.
* பொது சிவில் சட்டம் பழங்குடியினருக்கு பொருந்தாது என்ற ஒன்றிய அரசின் பேச்சு, இந்தியா போன்ற பன்முகத்தன்மை கொண்ட நாட்டிற்கு பொருந்தாது என்பதை தெளிவுபடுத்துகிறது என்கிறது தலையங்க செய்தி.
இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* ஆந்திராவில் எங்கு பார்த்தாலும் பலாத்காரம்; உள்துறை அமைச்சர் அமைதியாக இருந்தால் அவரது பதவியை நானே ஏற்பேன்: துணை முதலமைச்சர் பவன் கல்யாண் எச்சரிக்கை.
* மத்திய பல்கலைக்கழகங்களில் ஒதுக்கப்பட்ட காலியிடங்களை மோடி அரசு நிரப்பவில்லை என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே கண்டனம்.
* முதலில் மில்கிபூர் இடைத்தேர்தல் ஒத்தி வைக் கப்பட்டது, இப்போது மீதமுள்ள தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் தேதி மாற்றப்பட்டுள்ளது. பாஜக ஒருபோதும் இந்த அளவிற்கு பலவீனமாக இல்லை” பாஜக தோல்வியை கண்டு அஞ்சுவதாகவும், தாமதப்படுத்தும் உத்திகளை கையாள்வதாகவும் அகிலேஷ் குற்றச்சாட்டு..

– குடந்தை கருணா

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *