தாம்பரம் பெரியார் வாசகர் வட்ட கூட்டம்

1 Min Read

தாம்பரம், நவ. 5- தாம்பரம் பெரியார் பகுத்தறிவு புத்தகக் காட்சி மற்றும் புத்தக நிலையத்தில் 2.11.2024 அன்று மாலை 6 மணியளவில் “தாம்பரம் பெரியார் வாசகர் வட்டம்” சார்பில் 11 ஆவது சிறப்புக் கூட்டத்தில் “தமிழிசை திரைப்பாடல்களில் பகுத்தறிவு” என்னும் தலைப்பில் சைதாப்பேட்டை அரசு நன்முறை மேல்நிலை பள்ளி தமிழாசிரியர் முனைவர் க.சங்கர் பகுத்தறிவுடன் சிறப்பான தமிழ் திரைப்பட பாடல்களை மேற்கோள் காட்டி உரையாற்றினார்.

பாடலாசிரியர்கள் பகுத்தறிவு கவிராயர் உடுமலை நாராயணகவி, கலைவாணர் என்.எஸ்.கிருட்டிணன், பட்டுக்கோட்டை அழகிரி, பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம், புலமைப்பித்தன், வாலி மற்றும் வைரமுத்து ஆகியோரின் பகுத்தறிவுக் கவித்திறனை பெருமைப்படுத்தினார்.
கவிஞர்களின் தொலைநோக்கு சிந்தனைகளை மக்கள் மெய்சிலிர்க்கும் வகையில் மிக சிறப்பாக எடுத்துரைத்து மிகத் தெளிவாக உரையாற்றினர்.
மக்கள் பெருந்திரளாக க.சங்கர் அவர் களின் உரையைக் கேட்டு மகிழ்ந்தனர். கூட்ட நிறைவாக கழக மாவட்டத் தலைவர் ப.முத்தையன் பொன்னாடை அணிவித்து மகிழ்ந்தனர்.
முடிவில் மக்கள் கேட்ட கேள்வி களுக்கு சங்கர் விளக்கமாக பதில் வழங்கி நிறைவு செய்தார்கள்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *