ஏட்டுத் திக்குகளிலிருந்து…,

1 Min Read

 கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்

16.11.2023

டெக்கான் கிரானிக்கல், சென்னை:

கோட்சேவின் பேரன்களுக்கு எதிராகப் பெரியாரின் பேரன்கள் புறப்படுகிறோம். கன்னியாகுமரி திரிவேணி சங்கமத்தில் திமுக இளைஞர் அணி இருசக்கர பிரசார பேரணியை தொடங்கி வைத்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு.

நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:

ஆந்திரப் பிரதேசத்தில் விரிவான ஜாதிவாரி கணக் கெடுப்பு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டதையடுத்து, நேற்று நவம்பர் 15 முதல் மூன்று கிராமங்கள் மற்றும் இரண்டு வார்டு தலைமைச் செயலகங்களில் முன்னோடி யாக ஆந்திர அரசு தொடங்கியது.

தி இந்து:

ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பில், தேர்தல் எதிரொலி மட்டுமே பாஜகவை முன்னோக்கி நகர்த்த முடியும் என்கிறார் கட்டுரையாளர் நிஸ்துலா ஹெப்பார்.

மணிப்பூரின் சில மாவட்டங்களில் பழங்குடியினர் அமைப்பு ‘சுயராஜ்ஜியம்’ பிரகடனம் செய்துள்ளது.

தி டெலிகிராப்:

மஹுவா மொய்த்ரா தனது எம்.பி. பதவிக் காலத்தை பொது நலன் கருதி முடிக்க அனுமதிக்க வேண்டும் என்று வலியுறுத்தி மக்களவை தலைவர் ஓம் பிர்லாவிடம் 123 மூத்த குடிமக்கள் கடிதம்.

– குடந்தை கருணா

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *