50 ஏக்கர் ரூ. 5 கோடி செலவில் சிறுசேரி சிப்காட் வளாகத்தில் அமைகிறது நகர்ப்புற வனம்

1 Min Read

சென்னை, நவ.4- சிறுசேரி சிப்காட் வளாகத்தில் 50 ஏக்கரில், 5 கோடி ரூபாய் செலவில் நகர்ப்புற வனம் அமைக்க தமிழ்நாடு வனத்துறை ஒப்பந்தம் கோரியுள்ளது.
இது குறித்து வனத்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், (GFX) சிறுசேரி சிப்காட் வளாகத்தில் 50 ஏக்கரில் அமையவுள்ள நகர்ப்புற வனத்தில், குளங்கள், மணல் குன்றுகள், சைக்கிள் பாதை, நடைபாதை, விளக்க மய்யம், நர்சரி, தோட்டம், அமரும் இடம், குழந்தைகள் விளையாடும் இடம், திறந்தவெளி உடற்பயிற்சி இடம், மருத்துவ தாவரங்கள் கொண்ட தோட்டம், பூந்தோட்டம், வண்ணத்துப்பூச்சி தோட்டம் உள்ளிட்டவைகள் இடம் பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட் டுள்ளது.
சென்னை மற்றும் புறநகரில் பசுமை பரப்பளவை அதிகரிக்கும் வகையில் நகர்ப்புற வனத்தை உருவாக்க உள்ளதாக தெரிவித்துள்ள வனத்துறை, இதனை ரூ.5 கோடி செலவில் உருவாக்க ஒப்பந்தம் கோரியுள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *