சிதம்பரம், நவ. 4- சிதம்பரம் நட ராஜர் கோயிலில் தனிசந்நிதியாக உள்ள தில்லை கோவிந்தராஜப் பெருமாள் கோயில் கொடிமரத்தை மாற்ற அறங்காவலர் குழுவினர் பூர்வாங்க பூஜைகள் செய்ய முயன்றனர்.
இதனால், அவர்களுக்கும், தீட்சிதர் களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதைய டுத்து, காவல் துறையினர் இருதரப்பினரையும் சமரசம் செய்து பேச்சு வார்த்தைக்கு அழைத்துச் சென்றனர்.
சிதம்பரம் நடராஜர் கோயிலில் சைவர்களின் நடராஜர் சந்நிதியும், வைணவர்களின் தில்லை கோவிந் தராஜப் பெருமாள் சந்நிதியும் அமைந் துள்ளன. ‘தில்லை கோவிந்தராஜப் பெருமாள் கோயிலில் பிரம்மோற்சவம் நடத்தப்படவுள்ளதால், இந்தக் கோயிலில் சேதமடைந்த கொடிம ரத்தை அகற்றிவிட்டு,புதிய கொடிமரம் நிறுவ தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதற்கு இந்துசமய அறநிலையத்துறை இணை ஆணையர் உத் தரவும் பிறப்பித் துள்ளார். நவம்பர் 4-ஆம் தேதி பழைய கொடிமரத்தை அகற்றி வேறு கொடிமரம் அமைக்க பாலாலயம் செய்யப்பட உள்ளது’ என்று கோயில் அறங்காவலர் சுதர்சனம், கோயில் பொது தீட்சிதர்களின் செயலருக்கு கடிதம் அனுப்பினார்.
இதற்கு பதிலளித்து இந்து சமய அறநிலையத் துறை இணை ஆணையர் மற்றும் தில்லை கோவிந்தராஜப்’ பெருமாள் கோயில் நிர்வாக அறங் காவலருக்கு பொது தீட்சிதர்களின் செயலர் உ.வெங்கடேச தீட்சிதர் கடி தம் அனுப்பினார்.
நடராஜர் கோயில் தில்லை கோவிந்த ராஜப் பெருமாள் சந்நிதி பிரம்மோற்சவம் சம்பந்தமாக வழக்குகள் சிறப்பு அமர்வின் முன் நிலுவையில் உள்ளன. தில்லை கோவிந்தராஜப் பெருமாள் சந்நிதியை பொருத்தவரை, முந்தைய உரிமையியல் நீதிமன்ற வழக்குகளில் அறங்காவலர்களை கட்டுப்படுத்தும் தீர்ப்புகள் உள்ளன என்பதையும் தங்கள் தற்போது புதிய கொடிமரம் வைப்ப தற்கான எந்த அவசர சூழ்நிலையும் தேவையும் இல்லை.
அதாவது மேற்படி வழக்குகளின் முக்கியமான சாட்சியை அழிப்ப தற்கான முயற்சியாகவே தற்போது புதிய கொடிமரம் நிறுவும் முயற்சி நடைபெறுகிறது. இது நீதிமன்ற அவமதிப்பு செயலாகும் எனத் தெரிவித்திருந்தார்.
நேற்று (3.11.2024) மாலை அறங்காவலர் குழு வினர் பூர்வாங்க பூஜை செய்தனர். அப்போது, கோயில் பொது தீட்சிதர்கள் இதுகுறித்த வழக்குகள் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளபோது பூஜைகளை செய்யக் கூடாது என வலியுறுத்தி முழக்க மிட்டதால், இருதரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
தகவலறிந்த சிதம்பரம் காவல் ஆணையர் அகஸ்டின் ஜோஸ்வா லாமேக், காவல் ஆய்வாளர் ரமேஷ்பாபு மற்றும் காவல்துறையினர் கோயிலுக்குச் சென்று இருதரப்பினரையும் பேச்சுவார்த்தைக்கு அழைத்துச்சென்றனர்.