மணிப்பூர்: வன்கொடுமையை கண்டித்து கடத்தூரில் ஆர்ப்பாட்டம்

0 Min Read

அரசியல்

தருமபுரி, ஜூலை29- மணிப்பூரில் நடைபெற்று வரும் வன்கொடுமையைக் கண்டித்து தர்மபுரி மாவட்டம்  கடத்தூரில் சமூக நல்லிணக்க மேடை சார்பில் நடை பெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் திராவிடர் கழகம் சார்பில் கழக காப்பாளர்  தமிழ்ச்செல்வன், ஒன்றிய கழகத் தலைவர் பெ.சிவலிங்கம், நகரத் தலைவர் நெடுமிடல் மற்றும் மாணவர் கழக பொறுப்பாளர் கலந்து கொண்டனர். மாவட்ட மாணவர் கழக தலைவர் இ.சமரசம் கண்டன உரையாற்றினார்.ஆர்ப்பாட்டத்தில் விடுதலை சிறுத்தைகள்கட்சி, இந்திய கம்யூனிஸ்ட்( மார்க்சிஸ்ட்), இஸ்லாமிய அமைப்புகள், பவுத்த நலச்சங்கம், விடுதலை வாசகர் வட்டம் ஆகிய அமைப்புகள் கலந்து கொண்டன.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *