தென்சென்னை மந்தைவெளி பகுதியில் நடை பெற்ற தெருமுனைப் பிரச்சாரக் கூட்டம்

Viduthalai
1 Min Read

அரசியல்

மந்தைவெளி, ஜூலை 29- தென்சென்னை மாவட்ட திராவிடர் கழகம் மற்றும் மந்தைவெளி இளைஞர் அணி சார்பில் “வைக்கம் போராட்ட நூற்றாண்டு – முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் நூற்றாண்டு” தெருமுனைப் பிரச்சார கூட்டம் 26.7.2023 அன்று மாலை 6 மணி அளவில் மந்தைவெளி பகுதி செயின்ட் மேரிஸ் பாலம் அருகில் நடைபெற்றது.

மாவட்ட இளைஞரணி துணை செயலாளர் இரா.மாரிமுத்து கூட்டத்திற்கு தலைமையேற்று உரையாற்றினார். மாவட்ட செயலாளர் செ.ர.பார்த்தசாரதி அனைவரையும் வரவேற்று உரையாற்றினார். தலைமைக் கழக அமைப்பாளர்கள் தே.செ.கோபால், வி.பன்னீர்செல்வம், மாவட்டத் தலை வர் இரா.வில்வநாதன், மாவட்டத் துணைத் தலைவர் டி.ஆர்.சேதுராமன், மாவட்டத் துணைச் செயலாளர் சா.தாமோதரன் முன்னிலை வகித்தனர்.

மாநில இளைஞரணி துணைச் செயலாளர் மு.சண்முகப்பிரியன் தொடக்க உரையாற்றினார்.

துணைப் பொதுச்செயலாளர் வழக்குரைஞர் 

சே.மெ. மதிவதனி முதன்மை உரையாற்றினார்.

அதற்கடுத்து கழகப் பேச்சாளர் தஞ்சை இரா.பெரியார்செல்வன் எழுச்சிமிகு சிறப்புரையாற்றினார்.

நிகழ்ச்சியை சிறப்பாக ஏற்பாடு செய்த 

இரா.மாரிமுத்துவுக்கும் மற்றும் பேச்சாளர்களுக்கும் பயனாடை அணிவித்துப் பாராட்டுத் தெரிவிக்கப்பட்டது.

தென் சென்னை மாவட்ட இளைஞரணி செயலாளர் ந.மணிதுரை, மயிலை ஈ.குமார், வட சென்னை மாவட்ட செயலாளர் சு.அன்புசெல்வன், சோழிங்கநல்லூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழக அமைப்பாளர் பி.சி.செய ராமன், பெரியார் நூலக வாசகர் வட்டத் தலைவர் வழக்குரைஞர் ஆ. வீரமர்த்தினி, ஆவடி மாவட்ட துணைச் செயலாளர் க.தமிழ்ச்செல்வன், தாம்பரம் நகர செயலாளர் சு.மோகன்ராஜ், வி.வளர்மதி, பி.அஜந்தா, மா.சண்முகலட்சுமி, மா.தமிழரசி, மா.ஜெயலட்சுமி, மா.இனியவள், சா.இன்பக்கதிர், திமுகவை சேர்ந்த கோகுல், கந்தசாமி, மற்றும் எழுத்தாளர் சாலமுத்து ஆகியோருடன் ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டு ஆர்வமுடன் செவிமடுத்தனர்.

கூட்டத்தின் முடிவில் மாவட்டத் தலைவர் இரா.வில்வநாதன் தலைமையில் மாவட்ட இளைஞரணி துணை செயலாளர் இரா.மாரிமுத்து கழகக் கொடி ஏற்றினார்.

நிகழ்ச்சியின் முடிவில் ஆ‌பன்னீர் நன்றி உரை யாற்றினார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *