கடவுளை நம்புவோர் கைவிடப்படுவார் சூடான பானை விழுந்து பக்தர்கள் 10 பேர் காயம்

1 Min Read

மதுரா, நவ. 3- உத்தரப்பிரதேசத்தின் மதுராவின் பிருந்தாவன் பகுதியில் கவுரி கோபால் ஆசிரமம் உள்ளது. இங்கு 1.11.2024 அன்று பக்தர்களுக்கு பிரசாதமாக கிச்சடி வழங்கப்பட்டது. இதை வாங்குவதற்காக ஏராளமான பெண்கள் உள்ளிட்ட பக்தர்கள் வரிசையில் காத்திருந்தனர். அவர்களுக்கு வழங் குவதற்காக ஒருவர் கிச்சடியை பானையில் எடுத்து வந்தார்.

அப்போது அவரது கையில் இருந்து திடீரென அந்த கிச்சடி பானை தவறி கீழே விழுந்தது. அதில் இருந்த கிச்சடி பக்தர்கள் மீது சிதறியது. இதில் 10 பெண் பக்தர்கள் காயமடைந்தனர். உடனே அவர்கள் அனைவரும் மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். இதில் மேற்கு வங்காளத்தை சேர்ந்த 2 பெண்களுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. அவர்கள் மேல் சிகிச்சைக்காக ஆக்ராவுக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *