முன்பதிவு
ரயில் பயணச் சீட்டு முன்பதிவு செய்வதற்கான கால அவகாசம் 120 நாள்களில் இருந்து 60 நாள்களாக குறைக்கப்படுவதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்து இருந்தது. இந்த நடைமுறை நவம்பர் 1ஆம் தேதி முதல் அமலுக்குள் வந்துள்ளது. எனினும், ஏற்கெனவே முன்பதிவு செய்தவர்களுக்கு எவ்வித பாதிப்பும் இலலை என ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
விரிவாக்கம்
நீரிழிவு நோயாளிகளுக்கான ‘பாதம் பாதுகாப்போம்’ திட்டம் தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைக்கும் விரிவாக்கம் செய்யப்படுவதாக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
புதிய பாடத்திட்டம்
முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வுக்கான பாடத்திட்டத்தை மாற்றி அமைக்க பள்ளிக்கல்வி இயக்ககம் முடிவு செய்துள்ளது. அதன்படி, விரைவில் வரைவு பாடத்திட்டம் உருவாக்கப்பட்டு இறுதி செய்யப்பட உள்ளது. அடுத்த தேர்வு புதிய பாடத்திட்டத்தின்படி நடைபெறும் என பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகள் தகவல்.
அறிவுறுத்தல்
குழந்தைகள் இல்லங்கள், முதியோர் இல்லங்கள் போன்றவை சம்பந்தப்பட்ட துறைகளின் கீழ் பதிவு உரிமம் பெறுவதற்காக பதிவு செய்ய வேண்டும் என சென்னை மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே அறிவுறுத்தியுள்ளார்.
காசநோய் பாதிப்பு
நடப்பாண்டில் நாடு முழுவதும் தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளில் காசநோய் பாதிப்புடன் அனுமதிக்கப்பட்டவர்களின் தரவுகளை சுகாதாரத் துறை ஆய்வு செய்தபோது, 21 லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு அந்நோய் இருந்தது கண்டறியப்பட்டது. தமிழ்நாட்டில் 75,702 பேருக்கு காசநோய் பாதிப்பு இருந்தது. அவர்களில், தனியார் மருத்துவமனைகளில் 24,685 பேரும், அரசு மருத்துவமனைகளில் 50,837 பேரும் முதல்கட்ட சிகிச்சை பெற்றுள்ளனர்.
நுரையீரல் புற்றுநோய்
இளைஞர்களிடம் புகைபிடிக்கும் பழக்கத்தைக் கட்டுப்படுத்துவதன் மூலம் உலகளவில் அதிகரித்து வரும் நுரையீரல் புற்றுநோய் இறப்புகளைத் தவிர்க்க முடியும் என பிரபல மருத்துவ இதழான லான்செட் நடத்திய ஆய்வு தெரிவித்துள்ளது. 40 சதவீதம் நுரையீரல் புற்றுநோய் மரணங்கள், ஜனவரி 1, 2006 முதல் டிசம்பர் 31, 2010க்கு இடையில் பிறந்த இளைய தலைமுறையினருக்கு ஏற்பட்டுள்ளன என இந்த ஆய்வு தெரிவிக்கிறது.
செய்திச்சுருக்கம்
Leave a Comment