தாழ்த்தப்பட்ட சமுகத்தைச் சேர்ந்த முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே மகனும் நாடாளுமன்ற உறுப்பினருமான சிறிகாந்த் சிண்டே கோவிலுக்குள் நுழைந்தது குறித்து – கோவிலை தூய்மைப்படுத்தும் பணி முடிந்ததும் எப்படி நுழைந்தார் என விசாரணைக் குழுவை அமைத்துள்ளது கோவில் நிர்வாகம்.
மகாராட்டிரா முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டேவின் மகனும், மக்களவை உறுப்பினருமான சிறிகாந்த் ஷிண்டே, மத்தியப் பிரதேசத்தின் உஜ்ஜயினியில் உள்ள மகாகாலேஸ்வரர் கோயிலின் கர்ப்பகிரகத்திற்கு நுழைந்தது குறித்து விசாரணை செய்ய கோயில் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
மகாராட்டிராவின் தாணே மாவட்டத்தில் உள்ள கல்யாண் தொகுதி உறுப்பினரான சிறீகாந்த் ஷிண்டே, தனது மனைவியுடன் கோவிலுக்குள் நுழைந்து கடவுளை வழிபட்டதாக கோயில் அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த நிகழ்வின் காட்சிப் பதிவு சமூக ஊடகங்களில் பரவலாகப் பகிரப்பட்டு, சர்ச்சையை ஏற்படுத்தியது.
கோயில் குழுவின் தலைவரும், உஜ்ஜயின் மாவட்ட ஆட்சியருமான நீரஜ் குமார் சிங், சிறீகாந்த் ஷிண்டேவின் அங்கீகரிக்கப்படாத நுழைவு குறித்து உடனடி நடவடிக்கை எடுக்குமாறு கோயில் நிர்வாகிக்கு உத்தரவிட்டுள்ளேன்” என்றார்.
கோயிலின் நிர்வாகி கணேஷ் தகாட், விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ள தாகவும், கர்ப்பகிரகத்தின் நுழைவு மற்றும் பிற அம்சங்களை கண் காணிக்கும் பொறுப்பில் உள்ள ஆய்வாளர் மற்றும் ஏனையோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
இதே கோவிலில் தேர்தலுக்கு முன்பு ஹிந்துக்களின் வாக்கை பறிக்க கோவில்களைத் தூய்மைப் படுத்துவோம் என்ற பெயரில் நடந்த நாடகத்தின் போது உயர்ஜாதியினரான பாஜ்க தலைவர்கள் பலர் கோவிலுக்குச் சென்று காலபைரவருக்கு தங்கள் கைகளால் பூஜை செய்துவழிபட்டனர்.
இதில் மோடி தேவேந்திர பிட்னவஸ், ஜே.பி.நட்டா, ஓம் பிர்லா போன்றோரும் அடங்கும் ஹிந்து அல்லாத அமித்ஷாவும் கோவிலுக்குச் சென்று வழிபட்டுள்ளார்.
ஆனால், தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் சென்றது கோவில் நிர்வாகத்தில் உள்ள பார்ப்பனர்களுக்கு உறுத்தலை ஏற்படுத்தி உள்ளது.
தன் மீது இவ்வளவு பெரிய தீண்டாமை கொடுமை இழைக்கப்பட்ட போதும் பாஜக ஆதரவு அணியான சிவசேனா ஷிண்டே பிரிவோ இதனை பெரிது படுத்தவேண்டாம். இது அந்தக்கோவிலின் வழக்கம் – அவர்கள் வகுத்த விதிமுறைகள் படி பேசியுள்ளார்கள் தேர்தல் நெருங்குவதால் எதிர்க் கட்சிகள் இதைப் பிர்ச்சினையாக்கப் பார்க்கின்றனர் என்று கூறியுள்ளது.
தீண்டாமைக் கொடுமைக்கு ஆளான நாடாளுமன்ற உறுப்பினர் சிறீகாந்த் ஷிண்டேயும் எதிர்க்கட்சி இந்த விவகாரத்தை பெரிதுபடுத்தி தேர்தல் ஆதாயம் தேடுகின்றன என்று கூறியுள்ளார்.