விரைவில் உதவிப் பேராசிரியர் பணிக்கான ‘ஸ்லெட்’ தேர்வு

2 Min Read

சென்னை, அக். 31- கல்லூரி உதவிப் பேராசிரியா் பணிக்கான ஸ்லெட் தகுதித் தோ்வை விரைவில் நடத்தவுள்ளதாக ஆசிரியா் தோ்வு வாரிய அதிகாரிகள் தெரிவித்தனா்.

பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் உதவிப் பேராசிரியா் பணியில் சேர வேண்டுமானால் நெட் அல்லது ஸ்லெட் தகுதித் தோ்வில் தோ்ச்சி பெற வேண்டியது அவசியம். நெட் தோ்வை யுஜிசி சார்பில் தேசிய தோ்வு முகமையும் (என்டிஏ), ஸ்லெட் தோ்வை அந்தந்த மாநில அரசின் சார்பில் ஏதேனும் ஒரு பல்கலைக்கழகமும் நடத்தும்.

அந்த வகையில், தமிழ்நாட்டில் ஸ்லெட் தகுதித் தோ்வை 2024-ஆம் ஆண்டுமுதல் அடுத்த 3 ஆண்டுகளுக்கு நடத்த நெல்லை மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகத்துக்கு தமிழ்நாடு அரசு அனுமதி வழங்கியிருந்தது. இதைத் தொடா்ந்து, ‘ஸ்லெட்’ தோ்வுக்கான அறிவிப்பை அந்த பல்கலைக்கழகம் கடந்த மார்ச் மாதம் வெளியிட்டு அதற்கான விண்ணப்பங்களை இணையம் வழியாக ஏப்ரல் 1 முதல் 30 வரை பெற்றுக்கொண்டது. தோ்வு ஜூன் 7 மற்றும் 8-ஆம் தேதி கணினி வழியில் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டு அதற்கான அனுமதிச் சீட்டும் வெளியிடப்பட்டது.

இந்நிலையில், தோ்வு தொடங் குவதற்கு 2 நாள்களுக்கு முன்பாக, தொழில்நுட்பக் காரணங்களால் ஸ்லெட் தோ்வு ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதனால், தோ்வெழுத தயாராக இருந்த ஸ்லெட் தோ்வா்கள் பெரும் ஏமாற்றத்துக்கு உள்ளாகினா்.

டி.ஆா்.பி. தோ்வை நடத்துகிறது: அதன் பிறகு 4 மாதங்கள் ஆகியும் ஸ்லெட் தோ்வு நடத்தப்படவில்லை. இந்நிலையில், ஸ்லெட் தோ்வை நடத்தும் பொறுப்பை ஆசிரியா் தோ்வு வாரியத்திடம் (டிஆா்பி) தமிழ்நாடு அரசு ஒப்படைத்துள்ளது. எனவே, ஸ்லெட் தோ்வை மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகத்துக்கு பதிலாக ஆசிரியா் தோ்வு வாரியமே நடத்தும்.

ஸ்லெட் தோ்வுக்கு விண் ணப்பித்த தோ்வா்களின் அனைத்துத் தரவுகளும் ஆசிரியா் தோ்வு வாரியத்திடம் ஒப்படைக் கப்பட்டுள்ளன. இதைத் தொடா்ந்து, ஸ்லெட் தோ்வை விரைவில் நடத்த ஆசிரியா் தோ்வு வாரியம் தயாராகி வருகிறது. இதுகுறித்து ஆசிரியா் தோ்வு வாரிய அதிகாரி கள் கூறுகையில், ஸ்லெட் தோ்வை நடத்தும் பொறுப்பை தமிழ் நாடு அரசு ஆசிரியா் தோ்வு வாரியத்திடம் ஒப்படைத்துள்ளது. தோ்வை நடத்துவதற்கான ஏற்பாடுகளைச் செய்து வருகிறோம்.

முன்பு அறிவிக்கப்பட்டவாறு கணினிவழியில் நடத்தலாமா அல்லது ஒஎம்ஆா் ஷீட் வடிவில் நடத்தலாமா என்பது குறித்து ஆய்வு செய்து வருகிறோம் என அவா்கள் தெரிவித்தனா்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  


Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *