எதிர்க்கட்சிகளின் நம்பிக்கை இல்லா தீர்மானம் நாடாளுமன்றத்தில் விவாதம் எப்பொழுது?

Viduthalai
2 Min Read

திங்கள் கிழமை முடிவு செய்யப்படுமாம்

புதுடில்லி, ஜூலை 29- நாடாளுமன்றத் தில் எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானத் தின் மீதான விவாத தேதி திங்கட் கிழமை (31.7.2023) முடிவு செய்யப் படும் என தகவல்கள் தெரிவிக்கின் றன. 

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் கடந்த 20-ஆம் தேதி தொடங்கியது. அப்போது மணிப்பூர் வீடியோ வெளியான தால், அந்த பிரச்சினையை கிளப்பி நாடாளுமன்றத்தை எதிர்க்கட்சி கள் முடக்கின. மணிப்பூர் வன் முறை குறித்து பிரதமர் மோடி நாடாளுமன்றத்தில் பதில் அளிக்க வேண்டும் என எதிர்க்கட்சியினர் தொடர்ந்து வலியுறுத்தி வருகின் றனர்.

இந்நிலையில், பிரதமர் மோடியை நாடாளுமன்றத்தில் பதில் அளிக்க வைக்கும் வியூகமாக, அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வர எதிர்க்கட்சிகளின் ‘இந்தியா’ கூட்டணி தலைவர்கள் முடிவு செய்தனர். அதன்படி மக்களவை யில் அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானத்தை எதிர்க்கட்சி கள் கொண்டு வந்தன. இந்த தீர் மானத்தை விவாதத்துக்கு ஏற்ப தாக மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா அறிவித்தார். ஆனால், இதற் கான தேதி அறிவிக்கப்படவில்லை. இந்நிலையில் நம்பிக்கையில்லாத் தீர்மானம் குறித்து விவாதம் நடை பெறும் தேதி நாளை மறுநாள் திங்கட்கிழமை (31.7.2023) முடிவு செய்யப்படும் என தகவல்கள் தெரி விக்கின்றன. நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான விவாதத்தில் பிரதமர் மோடி பதில் அளிக்க வேண்டும். 

கடந்த சில நாட்களாக ராஜஸ் தான் மற்றும் குஜராத்தில் நலத் திட்ட தொடக்க விழா நிகழ்ச்சி களில் பிரதமர் மோடி பங்கேற்றார். ஆகஸ்ட் 1ஆ-ம் தேதி மகாராட்டி ராவில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் பிரதமர் மோடி பங்கேற்கவுள்ளார். அதனால் நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான விவாதம் மற்றும் ஓட்டெடுப்பு ஆகியவை அடுத்த வாரம் புதன்கிழமை மற் றும் வியாழக்கிழமைகளில் நடை பெற வாய்ப்புள்ளது. மழைக்கால கூட்டத் தொடர் ஆகஸ்ட் 11-ஆம் தேதியுடன் முடிவடைகிறது. நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற ஏராளமான மசோதாக்கள் நிலு வையில் உள்ளன. 

நம்பிக்கையில்லா தீர்மானம் பற்றி ஒன்றிய அரசுக்கு எந்தக் கவ லையும் இல்லை. 543 உறுப்பினர்கள் கொண்ட மக்களவையில் 5 இடங் கள் காலியாக உள்ளன. இதனால் பெரும்பான்மையை நிரூபிக்க 270 வாக்குகள் தேவை. பாஜக.வுக்கு 301 உறுப்பினர்களின் ஆதரவு உள் ளது. தே.ஜ கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகளின் நாடாளு மன்ற உறுப்பினர்களையும் சேர்த் தால் ஆதரவு எண்ணிக்கை 331 ஆக உள்ளது. 

கூட்டணியில் இல்லாத ஒய்எஸ் ஆர் காங்கிரஸ், பிஜூ ஜனதா தளம், பகுஜன் சமாஜ், தெலுங்கு தேசம் கட்சி ஆகிய கட்சிகள் ஓட் டெடுப்பில் கலந்து கொள்ளாமல் ஒன்றியய அரசுக்கு மறைமுக ஆத ரவை அளிக்கலாம். இதன்மூலம் பெரும்பான்மை ஓட்டுக்களின் எண்ணிக்கை மேலும் குறையும்.  நம்பிக்கையில்லா தீர்மானம் நிறை வேறாது என எதிர்க்கட்சிகளுக்கு நன்கு தெரியும். அவர்களின் ஒரே நோக்கம், மணிப்பூர் விவகாரம் குறித்து பிரதமர் மோடியை பதில் அளிக்க வைப்பதுதான். ‘‘இந்த விவாதம் மணிப்பூர் மாநிலத்தின் நீதிக்கான போராட்டம். மணிப்பூர் மக்களின் உரிமைக்காக, ‘இந்தியா’ கூட்டணி துணை நிற்கிறது என் பதை இந்த விவாதம் மூலம் தெரிய வைப்போம் ’’ என காங்கிரஸ் கட்சி யின் கவுரவ் கோகாய் கூறியுள்ளார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *