தமிழர்களின் பண்டிகையா தீபாவளி? வாலாஜாபாத்தில் விழிப்புணர்வு துண்டறிக்கை வழங்கல்

Viduthalai
1 Min Read

வாலாஜாபாத், அக். 31- காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் பேருந்து நிலையம் அருகில், மாவட்ட பகுத் தறிவாளர் கழகத்தின் சார்பில் 29.10.2024 செவ்வாய்கிழமை மாலை வெளியிடப்பட்ட ‘தமிழர்களின் பண்டிகையா தீபாவளி?’ என்னும் விழிப்புணர்வுத் துண்டறிக்கை பொது மக்களுக்கு வழங்கப்பட்டது.

மாநில பகுத்தறிவாளர் கழக அமைப்பாளர் முனைவர் காஞ்சி
பா. கதிரவன், மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் அ.வெ. முரளி, மாவட்ட கழக இணை செயலாளர் சீத்தாவரம் ஆ. மோகன், மாவட்ட பகுத்தறிவாளர் கழகச் செயலாளர் பா. இளம்பரிதி, அறிவு வளர்ச்சி மன்றத்தின் அமைப்பாளர் நாத்திகம் நாகராசன், வாலாஜாபாத் ஒன்றிய கழக அமைப்பாளர் செல்வம், விடுதலை சிறுத்தைகள் கட்சி தோழர் அசோக்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டு துண்டறிக்கை வழங்கினர்.

வணிகர்கள், கிராமப்புற மக்கள், கம்பெனிகளில் பணியாற்றுவோர், பள்ளி மாணவ, மாணவியர் என பலதரப்பட்ட மக்கள் துண்டறிக்கையை வாங்கிப் படித்தனர்.

வாலாஜாபாத் பகுதியில் நல்ல விழிப்புணர்வை ஏற்படுத்தும் செயலாக அமைந்தது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *