தமிழர்களின் பண்டிகையா தீபாவளி? வாலாஜாபாத்தில் விழிப்புணர்வு துண்டறிக்கை வழங்கல்

1 Min Read

வாலாஜாபாத், அக். 31- காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் பேருந்து நிலையம் அருகில், மாவட்ட பகுத் தறிவாளர் கழகத்தின் சார்பில் 29.10.2024 செவ்வாய்கிழமை மாலை வெளியிடப்பட்ட ‘தமிழர்களின் பண்டிகையா தீபாவளி?’ என்னும் விழிப்புணர்வுத் துண்டறிக்கை பொது மக்களுக்கு வழங்கப்பட்டது.

மாநில பகுத்தறிவாளர் கழக அமைப்பாளர் முனைவர் காஞ்சி
பா. கதிரவன், மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் அ.வெ. முரளி, மாவட்ட கழக இணை செயலாளர் சீத்தாவரம் ஆ. மோகன், மாவட்ட பகுத்தறிவாளர் கழகச் செயலாளர் பா. இளம்பரிதி, அறிவு வளர்ச்சி மன்றத்தின் அமைப்பாளர் நாத்திகம் நாகராசன், வாலாஜாபாத் ஒன்றிய கழக அமைப்பாளர் செல்வம், விடுதலை சிறுத்தைகள் கட்சி தோழர் அசோக்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டு துண்டறிக்கை வழங்கினர்.

வணிகர்கள், கிராமப்புற மக்கள், கம்பெனிகளில் பணியாற்றுவோர், பள்ளி மாணவ, மாணவியர் என பலதரப்பட்ட மக்கள் துண்டறிக்கையை வாங்கிப் படித்தனர்.

வாலாஜாபாத் பகுதியில் நல்ல விழிப்புணர்வை ஏற்படுத்தும் செயலாக அமைந்தது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *