காங்கிரஸ் சட்டமன்றத்தலைவர் செல்வப் பெருந்தகை
சென்னை, ஜூலை 29- பாஜகவினரின் அராஜகப் போக்கும் தொடர் வன்முறைசெயல்பாடுகள் குறித்து காங்கிரஸ் சட்டமன்றத் தலைவர் செல்வப் பெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கையில், “கடந்த நாடாளுமன்றத் தேர்தல் பரப்பு ரையின் போது, பிரதமர் மோடி அவர்கள் ராமநாதபுரத்தில் 13 ஏப்ரல் 2019 அன்று பேசும் போது, ‘இந்தியாவில் ஏழ்மையைப் போக் குவதே எனது கடமை. ஏழ்மையின் வலியை உணர்ந்தவன் நான். ஏனென்றால், ஏழைத்தாயின் மகன் நான் ரயிலில் பெட்டி பெட்டியாக ஏறி டீ விற்றவன். ஏழ்மையை அனு பவித்தவன். எனக்கு 300 நாடாளு மன்ற உறுப்பினர்களைத் தாருங்கள்.
இந்தியாவின் ஏழ்மையைப் போக்குகிறேன் என்று பேசினார்’. மோடி சொன்னதை செய்து விட்டாரா? ராமேஸ்வரத்தில் இருந்து தமிழ்நாடு முழுவதும் நடைபயணம்போகும் தமிழ் நாட்டின் பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை பிரதமர் கூறியதை நிறைவேற்றிவிட்டார் என்று தமிழ் நாட்டு மக்களிடம் பேசுவாரா?
பாஜக தேர்தல் அறிக்கையில் கூறியபடி, ஒவ்வொருவர் வங்கிக் கணக்கிலும் 15 லட்சம் ரூபாய் செலுத்துவோம், ஆண்டிற்கு 2 கோடி பேருக்கு வேலைவாய்ப்பு வழங்குவோம், பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலையை பாதியாகக் குறைப்போம். இந்த வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றியதைப் பற்றி தமிழ் நாட்டு மக்களிடம் பேசுவாரா அண்ணாமலை? மாநிலங்களுக்கு ஜி.எஸ்.டி வரிப்பங்களிப்பில் உரிய நிதி வழங்காமல் தமிழ்நாட்டை வஞ்சிப்பது குறித்தும், அதானி குழுமத்தின் மெகா முறைகேடுகள் குறித்த இண்டென்பர்க் அறிக்கை குறித்தும், பொருளாதாரத்தில் முன் னேறிய வகுப்பினருக்கு இடஒதுக் கீடு கொண்டுவந்தது குறித்தும், பன்முகத்தன்மை கொண்ட இந் தியாவில் ‘ஒரே’ என்ற முழக்கத் துடன் அனைத்தையும் மாற்றி வருவது குறித்தும், நாடாளுமன்ற மாண்பை சீர்குலைத்து நாடா ளுமன்றத்தின் இரு அவைகளிலும் மாற்றுக்கருத்துக் கொண்டோரை பேசவிடாமல், பிரதான எதிர்க் கட்சிகளின் கேள்விக்கு செவிசாய்க் காமல் நாடாளுமன்ற மாண்பை சிதைத்தது குறித்தும் அண்ணா மலை பேசுவாரா? விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குவது குறித்தும், ஆர்.எஸ்.எஸ். சிந்தனை கொண்டவர்களை ஆளுநர்களாக நியமித்து, எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களை முடக்குவது குறித்தும், ஊழல் குறித்து பேசும் அண்ணாமலை, ஊழல் செய்த அ.தி.மு.க. அமைச்சர்கள் மீது நீதிமன்ற நடவடிக்கை எடுப்பதற்கு அனுமதி மறுக்கும் ஆளுநர் செயல் பாடுகள் குறித்தும், பாஜகவை எதிர்க்கும் அரசியல் பிரமுகர்களை அமலாக்கத்துறை, சி.பி.அய், வரு மான வரித்துறை மூலம் பழிவாங் குவது குறித்தும் தமிழ்நாட்டு மக் களிடம் பேசுவாரா அண்ணா மலை?
தற்போது மணிப்பூரில் பற்றி எறியும் பிரச்சினைகள் குறித்தும், மேலும், மணிப்பூர் வன்முறைக்கு மாநில அரசும் உடந்தையாக செயல்பட்டது என்றும், மெய்தி சமூகத்தின் வன்முறையாளர்க ளுக்கு அரசு உதவி செய்கின்றது என்றும், தீவிரவாதக் குழுக்களுடன் மாநில முதலமைச்சர் பைரன் சிங் நேரடி தொடர்பில் இருக்கிறார் என்று மணிப்பூர் பாஜக சட்ட மன்ற உறுப்பினர் பவுலியன்லல் ஹாவ்கிப் கூறினார். இவற்றை பற்றியெல்லாம் தனது நடைபய ணம் மூலம் தமிழ்நாட்டு மக்களுக்கு எடுத்துச் சொல்லும் மன தைரியம் உண்டா? தமிழ்நாடு அமைதிப் பூங்காவாக இருக்கும் சூழலில், இந்தியா முழுவதும் வெறுப்பு அரசியல் செய்து வரும் மதவாத கட்சியான பா.ஜ.க நடைபயணம் என்ற பெயரில் மத, சமூக பதற் றத்தை ஏற்படுத்தப் போகிறதோ என்ற சந்தேகம் எழுகிறது. பா.ஜ.க. நடத்தவுள்ள பாதயாத்திரை விவ காரத்தில்; தமிழ்நாடு காவல்துறை மற்றும் உளவுத்துறை மிகவும் எச் சரிக்கையாகயும், விழிப்புடணும் செயல்படவேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.