தெய்வீக பக்தர்கள் பேரவை நிறுவன தலைவர் அமைச்சரிடம் மனு!
கடலூர், அக்.31 தில்லை கோவிந்தராஜ பெருமாள் கோவிலில் கொடிக்கம்பம் அமைVVக்கும் பணியை தடுக்கும் சிதம்பரம் நடராஜர் கோவில் பொது தீட்சிதர்களின் ஆனவ போக்கை கண்டித்தும் உரிய நடவடிக்கை எடுக்க கோரி இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் பி கே சேகர் பாபுவிடம் தெய்வீக பக்தர்கள் பேரவை நிறுவன தலைவர் ஜெமினி எம்.என்.ராதா மனு ஒன்று அளித்தார்.
ஜெமினி எம்எ.ன்.ராதா வெளி யிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்ப தாவது:
–
பல்லவ மன்னர்கள், சோழ மன்னர்கள், பாண்டிய மன்னர்கள், சேர மன்னர்கள், விஜயநகர பேரரசு மன்னர்கள், நாயக்க மன்னர்கள் போன்ற மன்னர்களால் பல்வேறு காலகட்டத்தில் கட்டப்பட்ட சிதம்பரம் நடராஜர் கோவில் நிர்வாகம் இன்று பொது தீட்சிதர்கள் கையில் சிக்கி தவிக்கின்றது.
பக்தர்கள் கனகசபை மீது ஏறி சாமி தரிசனம் செய்யும் பாரம்பரியமான நடைமுறைக்கும் பக்தர்கள் கனக சபை மீது ஏறி தமிழில் தேவாரம் திருவாசகம் பாடுவதற்கு தீட்சிதர்கள் தடை விதித்த நிலையில் தமிழ்நாடு அரசு உரிய நடவடிக்கை எடுத்ததால் சிற்றம்பலம் மேடையில் நின்று தமிழில் தேவாரம், திருவாசகம் பாடி பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்
மன்னர்களால் கோவில் நிர்வாகத்திற்கு அளிக்கப்பட்ட 3000 ஏக்கர் நிலங்களை முறைகேடான முறையில் விற்ற பொது தீட்சிதர்கள் இன்று நீதிமன்றத்தின் படிக்கட்டில் ஏறி இறங்குகின்றனர்.
‘‘சிதம்பரம் நடராஜர் கோவிலில் பாரம்பரியமான சின்னங்களை கட்டடங்களை தொல்லியல் துறை யின் அனுமதியின்றி தங்களது சுய லாபத்திற்காக இடித்து கட்டுமானப் பணிகளை மேற்கொண்டு தங்களது அலுவலகத்தை 5 நட்சத்திர ஓட்டலின் அறை போன்று மாற்றி அமைத்துள்ள னர்.
400 ஆண்டு காலமாக…
இந்நிலையில் வளாகத்தில் உள்ள தில்லை கோவிந்தராஜ பெருமாளுக்கு 400 ஆண்டு காலமாக சைவ வைணவ பாகுபாட்டால் பிரம்மோற்சவம் நடைபெறாமல் உள்ளது.
இந்து சமய அறநிலைத்துறை அறங்காவலர்கள் பிரம்மோற்சவம் நடத்த முன் வந்தும் கூட பிரமோற்சவம் நடத்துவதற்கு பொது தீட்சிதர்கள் தடை விதித்து வருகின்றனர். இது குறித்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு என். W.P.33865/2023 சிறப்பு அமர்வு முன் நிலுவையில் உள்ளது.
பிரம்மோற்சவம் நடத்துவது குறித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வருகிறதே தவிர தில்லை கோவிந்தராஜ பெருமாள் கோவிலில் கட்டுமான பணிகள் மற்றும் கொடிமரம் மாற்றி அமைப்பது குறித்து எந்த வழக்கும் இல்லை எந்தத் தடையும் இல்லை.
தில்லை கோவிந்தராஜ பெருமாள் கோவிலில் இருக்கும் கொடி மரத்தை எடுத்து விட்டு அதற்கு பதிலாக புதிய கொடிமரம் நிறுவுகின்ற பணியில் வருகின்ற நவம்பர் 4ஆம் தேதி காலை இந்து சமய அறநிலை துறையும் அறங்காவலர்களும் ஈடுபடுகின்ற போது பொது தீட்சிதர்கள் பூரண முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
ஆண்டவன் படைப்பில் அனை வரும் சமமெனில் ஏன் இந்த பாகுபாடு?
சைவ வைணவ சமய ஒற்றுமைக்கு எடுத்துக்காட்டாக மதுரையில் நடை பெறுகின்ற மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் கள்ளழகர் ஆற்றில் இறங்கும் விழாவை ஒன்றிணைத்து நடைபெறுகின்ற சித்திரைத் திரு விழாவை போன்று தில்லை கோவிந்த ராஜ பெருமாளுக்கு பிரம்மோற்சவம் நடத்த பக்தர்களின் கோரிக்கையை மதித்து தில்லை கோவிந்தராஜ பெரு மாள் கோவில் இருக்கும் பழைய கொடி மரத்தை நீக்கி புதிய கொடிமரம் அமைக்கவும் பிரம்மோற்சவம் நடத்தவும் சைவ வைணவ சமய நல்லி ணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக பொது தீட்சிதர்கள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
மேற்கண்டவாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.