Viduthalai Daily NewspaperViduthalai Daily NewspaperViduthalai Daily Newspaper
Notification Show More
Font ResizerAa
  • தந்தை பெரியார்
  • ஆசிரியர் அறிக்கை
  • திராவிடர் கழகம்
  • வாழ்வியல் சிந்தனைகள்
  • தலையங்கம்
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • உலகம்
  • கட்டுரை
  • மேலும்
    • கழகம்
    • அப்பா மகன்
    • அரசு
    • அறிவியல்
    • அறிவியல் அரங்கம்
    • ஆசிரியர்
    • ஆசிரியர் உரை
    • ஆசிரியர் விடையளிக்கிறார்
    • இந்நாள் – அந்நாள்
    • இளைஞர் அரங்கம்
    • உடற்கொடை
    • ஊசி மிளகாய்
    • ஒற்றைப் பத்தி
    • கடிதம்
    • கழகக் களத்தில்
    • கவிதை
    • குரு – சீடன்
    • சட்டமன்றச் செய்திகள்
    • சிறப்புக் கட்டுரை
    • தந்தை பெரியார் அறிவுரை
    • தலையங்கம்
    • நடக்க இருப்பவை
    • நூல் அறிமுகம்
    • நேர்காணல்
    • பகுத்தறிவுக் களஞ்சியம்
    • பதிலடிப் பக்கம்
    • பிற இதழிலிருந்து…
    • பெரியார் கேட்கும் கேள்வி!
    • போர்வாள்!
    • மகளிர் அரங்கம்
    • மருத்துவம்
    • மறைவு
    • மற்றவை
    • மின்சாரம்
    • வரலாற்றுச் சுவடுகள்
  • E-Paper
  • OTTOTTOTT
Reading: பெண்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்திட, சம உரிமை, சமூகநீதியுடன் பாலியல் நீதிக்காகவும் தொடர்ந்து போராடி ஆகவேண்டும்!
Share
Font ResizerAa
Viduthalai Daily NewspaperViduthalai Daily Newspaper
Search
  • தந்தை பெரியார்
  • ஆசிரியர் அறிக்கை
  • திராவிடர் கழகம்
  • வாழ்வியல் சிந்தனைகள்
  • தலையங்கம்
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • உலகம்
  • கட்டுரை
  • மேலும்
    • கழகம்
    • அப்பா மகன்
    • அரசு
    • அறிவியல்
    • அறிவியல் அரங்கம்
    • ஆசிரியர்
    • ஆசிரியர் உரை
    • ஆசிரியர் விடையளிக்கிறார்
    • இந்நாள் – அந்நாள்
    • இளைஞர் அரங்கம்
    • உடற்கொடை
    • ஊசி மிளகாய்
    • ஒற்றைப் பத்தி
    • கடிதம்
    • கழகக் களத்தில்
    • கவிதை
    • குரு – சீடன்
    • சட்டமன்றச் செய்திகள்
    • சிறப்புக் கட்டுரை
    • தந்தை பெரியார் அறிவுரை
    • தலையங்கம்
    • நடக்க இருப்பவை
    • நூல் அறிமுகம்
    • நேர்காணல்
    • பகுத்தறிவுக் களஞ்சியம்
    • பதிலடிப் பக்கம்
    • பிற இதழிலிருந்து…
    • பெரியார் கேட்கும் கேள்வி!
    • போர்வாள்!
    • மகளிர் அரங்கம்
    • மருத்துவம்
    • மறைவு
    • மற்றவை
    • மின்சாரம்
    • வரலாற்றுச் சுவடுகள்
  • E-Paper
  • OTTOTTOTT
Follow US
ஆசிரியர் அறிக்கைதிராவிடர் கழகம்

பெண்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்திட, சம உரிமை, சமூகநீதியுடன் பாலியல் நீதிக்காகவும் தொடர்ந்து போராடி ஆகவேண்டும்!

Last updated: November 1, 2024 11:06 am
Published October 31, 2024
நடக்க இருப்பவை
SHARE

* நாட்டில் சரி பகுதியாக உள்ள பெண்கள் பெற்ற உரிமை கையளவுகூட இல்லை – பெறாதது மலையளவு!
* சமூக பாலியல் நீதி உலவும் பெரியார் மண்ணான சென்னை உயர்நீதிமன்றத்தில்தான் அதிக பெண் நீதிபதிகள்!
* மற்ற மாநில நீதிமன்றங்களில் பெண்கள் பெற்ற இடங்கள் குறைவுதான்!
தமிழர் தலைவர் ஆசிரியர் விடுத்துள்ள அறிக்கை

நாட்டில் சரி பகுதியாக உள்ள பெண்கள் பெற்ற உரிமை கையளவுகூட இல்லை – பெறாதது மலையளவு! அவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்திட, சம உரிமை, சமூகநீதியுடன் பாலியல் நீதிக்காகவும் தொடர்ந்து போராடி ஆகவேண்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அறிக்கை விடுத்துள்ளார்.

அவரது அறிக்கை வருமாறு:

மக்கள் தொகையில் சரி பகுதியாக உள்ளவர்கள் மகளிர்.
மானுடத்தினை வாழ வைப்பதில் அவர்களது பங்கும், பணியும் அளப்பரியது.
ஆனால், பொதுவாக மதங்களில் (பவுத்தம் தவிர) மற்ற மதங்கள் அவர்களுக்கு சம உரிமை, சம பங்கு அளிப்பதில்லை.

Also read

நடக்க இருப்பவை
சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழா கருத்தரங்கம்
‘பெரியார் உலகம்’ நன்கொடை

வருணாசிரம முறைப்படி பெண்கள்,
‘நமோ சூத்திரர்கள்’ என்றே அழைக்கப்படுகின்றனர்!

நம் நாட்டின் பெரும்பான்மை என்று மார்தட்டும் ஹிந்து மதம் என்ற வேத– ஆரிய மதத்தில் பெண்களுக்குப் பிறப்புரிமை, கல்வி உரிமை, சொத்துரிமை, வாக்குரிமை முதலிய பலவும் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகள் பறிக்கப்பட்டதோடு, தங்கள்வீட்டு (‘‘உயர்ஜாதி‘‘) பெண்களாக இருந்தாலும்கூட, அவர்களும் வர்ண தர்மப் பிரிவின்படி, படிக்கட்டு ஜாதி – வருணாசிரம முறைப்படி அவர்களை, ‘நமோ சூத்திரர்கள்’ என்றே அழைத்து, அவர்கள் உரிமைகள் பறிக்கப்பட்டுள்ளது – வேத, இதிகாச, மனுதர்ம, கீதை முதலிய ஹிந்து மத ஆவணங்களில்!
தந்தை பெரியார் அவர்கள் தொடங்கிய சுயமரியாதை இயக்கத்திற்கு இந்த ஆண்டு நூற்றாண்டு ஆகும். அதற்கு முன்னே, கால வரிசையில், ஜாதி ஒழிப்பு, ஒடுக்கப்பட்டோர் உரிமைக் குரலை மராத்திய மண்ணிலிருந்து கொடுத்த ஜோதிபாபூலே, கோலாப்பூர் மன்னர் சாகுமகராஜ், அதன் பிறகு புரட்சியாளர் டாக்டர் அம்பேத்கர் போன்றவர்கள், பெண் கல்வி, பெண்ணுரிமை – இவற்றிற்குத் தனியே இயக்கம் கண்டார்கள் – மக்களிடையே எழுச்சியை உண்டாக்கினார்கள்.

டாக்டர் அம்பேத்கர் அவர்களை பதவியை விட்டு
வெளியேற செய்த வேதனை!

ஒன்றிய சட்ட அமைச்சராகவும், இந்திய அரசமைப்புச் சட்ட வரைவுக் குழுவின் தலைவராகவும் இருந்த டாக்டர் அண்ணல் அம்பேத்கர், பெண்ணுரிமையை ஹிந்து சட்டத் திருத்தம்மூலம் கொண்டுவர படாதபாடு பட்டும், அதற்கு அங்கே இடம்பெற்றிருந்த அந்நாளைய காங்கிரஸ் ஸநாதனிகள், குடியரசுத் தலைவர் இராஜேந்திர பிரசாத் உள்ளிட்டோர் (இவர் ‘காயஸ்தா‘ என்ற பார்ப்பனருக்கு அடுத்த உயர்ஜாதிக்காரர்) முட்டுக்கட்டைப் போட்டதினால், டாக்டர் அம்பேத்கர் அவர்கள் வெறுத்துப் போய், தனது சட்ட அமைச்சர் பதவியை இராஜினாமா செய்து வெளியேறியதுடன், விலகிடும் ஓர் அமைச்சர், தான் ஏன் விலகுகிறேன் என்ற விளக்கத்தை நாடாளுமன்றத்தில் சொல்ல உரிமை இருக்கிறது என்றாலும், அதை அனுமதிக்காமலேயே அவரைப் பதவியிலிருந்து வெளியேறச் செய்த வேதனை – வைதீக புரியின் வல்லாண்மைபற்றி பல கட்டுரைகள் எழுதும் அளவுக்கு ஆவணங்களும், ஆதாரங்களும் உண்டு.

இந்திய அரசியல் நிர்ணய சபையிலேயே 389 பேர் இடம்பெற்று, அரசமைப்புச் சட்டம் இயற்றும் அந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த அவையில், இந்தியா முழுவதிலிருந்து இடம்பெற்றிருந்த மகளிர் வெறும் ஏழு பேர்தான்.

அதில் கேரளத்தைச் சேர்ந்த ஆதிதிராவிட (பட்டிய லின) பெண்மணி ஒரே ஒருவர்தான்; மற்ற அறுவரும் உயர்ஜாதிப் பெண்களே!

பெண்களின் உரிமை அன்றிலிருந்து இன்றுவரை

பறிக்கப்பட்ட நிகழ்வுகள் ஏராளம் உண்டு!

இப்படி பெண்களின் உரிமை அன்றிலிருந்து இன்றுவரை பறிக்கப்பட்ட நிகழ்வுகள் – மறைமுகமாகவும், நேரடியாகவும் பல உண்டு.
நாடாளுமன்ற, சட்டமன்றத்தில் மகளிருக்கான இட ஒதுக்கீடு 33 சதவிகிதம் இடம்பெற்ற மசோதா, நாடாளுமன்றத்தில் சுமார் 35 ஆண்டுகளுக்குமேல் ஊறுகாய் ஜாடியில்தானே ஊறியது. இடையில் 4, 5 பொதுத் தேர்தல்களிலும் அப்படித்தான்!
பொதுத் தேர்தலுக்கு (2024) முன்பு, திடீரென்று பா.ஜ.க. அரசு, இதனை நடைமுறைப்படுத்த விசேஷ அக்கறை காட்டுவதுபோல நாடாளுமன்றத்தைக் கூட்டி, நிறைவேற்றிய மசோதாவில், எப்போது நடைமுறைக்கு வரும் என்பது குறிப்பிடாத நிலையில், இன்னும் 5 ஆண்டுகளுக்குள் வருவது அந்த அறிவிப்பின்படி

சாத்தியமில்லையே!

இன்னமும் 10, 12 சதவிகித பிரதிநிதித்துவம்தான் உள்ளது!

யாரும் எளிதில் பெண்களுக்குப்
பிரதிநிதித்துவம் தருவதில்லை!

எல்லா கட்சிகளும் பெண்களின் வாக்குகளைக் கேட்கிறது; அதற்குக் கையேந்தினாலும், அந்தப் பெண்களை வஞ்சிக்க செய்வதில், ஆணாதிக்க சமூகம் நிறைந்த இந்த நாட்டில், யாரும் எளிதில் அவர்களுக்குப் பிரதிநிதித்துவம் தருவதில்லை.

மற்றொரு தகவல் இதோ:

நாடு முழுவதும் உள்ள உச்சநீதிமன்ற, உயர்நீதி மன்றங்களில் பெண்கள் நீதிபதிகளாக நியமனம் பெற்று, ‘‘நீதி அரசிகளாக‘‘ உள்ளவர்களின் விகிதாச்சாரம் எவ்வளவு தெரியுமா?

உச்சநீதிமன்றத்தில் 2024 ஜனவரி கணக்குப்படி, 9.3 விழுக்காடு; உயர்நீதிமன்றங்களில் 13.4 விழுக்காடு.

சென்னை உயர்நீதிமன்றத்தில்தான்
அதிக பெண் நீதிபதிகள்!

வடக்கே உள்ள மாநிலங்களில் உ.பி. பீகார், சட்டீஸ்கர், ஒடிசா, மணிப்பூர், மேகாலயா போன்றவற்றில் பெண் நீதிபதிகள் எண்ணிக்கை குறைவு அல்லது இல்லவே இல்லை என்ற நிலைதான்.

சென்னை உயர்நீதிமன்றத்தில்தான் அதிக பெண் நீதிபதிகள் (காரணம், இது சமூக பாலியல் நீதி உலவும் பெரியார் மண் – திராவிட பூமி – திராவிட இயக்கப் போராட்டங்களினால் ஏற்பட்ட விளைச்சல்).

மற்ற மாநிலங்களில் மனுநீதி ஆளுகிறது. திராவி டத்திலோ, மனித நீதி, மனித சமத்துவம்; மனித சுயமரியாதை இயக்கம் பல களங்களை அமைத்துப் போராடி

வென்று வருவதன் வெற்றி உலாவே இதற்குக் காரணம்!
தலைமை நீதிபதியாக இருந்தவரின் பாராட்டு!

பீகாரிலிருந்து வந்து தலைமை நீதிபதியாக இருந்து சில ஆண்டுகளுக்குமுன் ஓய்வு பெற்ற தலைமை நீதிபதி, விடைபெற்றுச் சென்றபோது, வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில், பெண்கள் 12 பேர் உயர்நீதிமன்ற நீதிபதிகளாக இருப்பது சென்னை உயர்நீதிமன்றத்தில்தான் என்று பாராட்டிப் பேசியதை மறக்க முடியாது.

பெண்கள் பெற்றது கையளவுகூட இல்லை – பெறாதது மலையளவு!
அவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்திட, சம உரிமை, சமூகநீதியுடன் பாலியல் நீதிக்காகவும் தொடர்ந்து போராடி ஆகவேண்டும் என்பதைத்தான் மேலே காட்டிய புள்ளி விவரமாக நமக்கும், நாட்டுக்கும் – ஆட்சியாளர்களுக்கும் வெகுவாக உணர்த்துகிறது.

கி.வீரமணி
தலைவர்
திராவிடர் கழகம்

சென்னை
31.10.2024 

 

Ad imageAd image

You Might Also Like

சோழிங்கநல்லூர் மாவட்ட கழக கலந்துரையாடல்

சென்னையில் பெரியார் திடலை வாங்கிட நிதி தந்ததுபோல், சிறுகனூர் ‘பெரியார் உலக’த்திற்கும் நிதி திரட்ட தயாராவீர்!!

ஜாதி மறுப்புத் திருமணம் செய்துகொண்ட இணையர் பெரியார் உலக நிதி

சேலம் – நாயக்கன்பட்டியில் ஏராளமான தோழர்கள் பறை இசைத்தும், கொள்கை முழக்கமிட்டும் கழகக் கொடி ஏந்தி பொதுச் செயலாளருக்கு உற்சாக வரவேற்பு

சிறுபிள்ளைத்தனம் – விஷமத்தனம் கண்டிக்கத்தக்கது!

TAGGED:கி.வீரமணிசமூகநீதிபெரியார் மண்
Share
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Ad imageAd image
- Advertisement -
Ad imageAd image

நடக்கவிருக்கும் நிகழ்ச்சிகள்

About US

"Viduthalai" is a Tamil newspaper founded by the social reformer Thanthai Periyar, in 1935. Aimed at promoting rationalism, social justice, and gender equality, it played a crucial role in advocating for the rights of marginalized communities in Tamil Nadu. The newspaper remains significant in the legacy of Periyar’s movement for a more equitable society. Under the able leadership of K. Veeramani, the current editor of "Viduthalai," the newspaper continues to uphold the values of Periyar's vision for social justice and equality. Veeramani, a prominent activist and advocate for rationalism, has revitalized the publication, ensuring it addresses contemporary issues while staying true to its foundational principles.
Quick Link
  • தந்தை பெரியார்
  • ஆசிரியர் அறிக்கை
  • திராவிடர் கழகம்
  • வாழ்வியல் சிந்தனைகள்
  • தலையங்கம்
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • உலகம்
  • கட்டுரை
  • மேலும்
    • கழகம்
    • அப்பா மகன்
    • அரசு
    • அறிவியல்
    • அறிவியல் அரங்கம்
    • ஆசிரியர்
    • ஆசிரியர் உரை
    • ஆசிரியர் விடையளிக்கிறார்
    • இந்நாள் – அந்நாள்
    • இளைஞர் அரங்கம்
    • உடற்கொடை
    • ஊசி மிளகாய்
    • ஒற்றைப் பத்தி
    • கடிதம்
    • கழகக் களத்தில்
    • கவிதை
    • குரு – சீடன்
    • சட்டமன்றச் செய்திகள்
    • சிறப்புக் கட்டுரை
    • தந்தை பெரியார் அறிவுரை
    • தலையங்கம்
    • நடக்க இருப்பவை
    • நூல் அறிமுகம்
    • நேர்காணல்
    • பகுத்தறிவுக் களஞ்சியம்
    • பதிலடிப் பக்கம்
    • பிற இதழிலிருந்து…
    • பெரியார் கேட்கும் கேள்வி!
    • போர்வாள்!
    • மகளிர் அரங்கம்
    • மருத்துவம்
    • மறைவு
    • மற்றவை
    • மின்சாரம்
    • வரலாற்றுச் சுவடுகள்
  • E-Paper
  • OTTOTTOTT
Other Links
  • Print Subscription
  • Privacy Policy
  • Contact
Our Other Publications
  • Unmai Magazine
  • The Modern Rationalist
  • Periyar Pinju Children’s Magazine
  • Dravidian Book House
© Viduthalai. All Rights Reserved.
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?