பறவைகளுக்காக பட்டாசு வெடிக்காத கிராமம் : வனத் துறை பாராட்டு

viduthalai
1 Min Read

திருப்பத்தூா், அக்.30- பறவைகளுக்காக பட்டாசு வெடிக்காத கொள்ளுகுடிபட்டி, வேட்டங்குடிபட்டி கிராம மக்களை பாராட்டி வனத் துறையினா் நேற்று (29.10.2024) இனிப்பு வழங்கினா்.

திருப்பத்தூா் அருகே ஏ.மேலையூா் அய்யாபட்டி ஊராட்சிக்குள்பட்ட கொள்ளுகுடிபட்டி, வேட்டங்குடிபட்டி கிராமங்களில் வேட்டங்குடி பறவைகள் சரணாலயம் அமைந்துள்ளது.

இந்தச் சரணாலயத்தின் பரப்பளவு 38.426 எக்டோ். பெரிய கொள்ளுகுடிபட்டி கண்மாய் 13.66 எக்டேரிலும், சின்னக்கொள்ளுக்குடிபட்டி கண்மாய் 6.351 எக்டேரிலும், வேட்டங்குடி கண்மாய் 16.415 எக்டேரிலும் உள்ளட்டக்கியுள்ளது. இந்தச் சரணாலயத்துக்கு செப்டம்பா் முதல் வாரத்திலிருந்தே ஆசியா, அய்ரோப்பா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளிலிருந்து பறவைகள் வரத்தொடங்கும். பின்னா், இந்தப் பறவைகள் இங்கேயே இனப்பெருக்கம் செய்து குஞ்சு பொரிக்கும்.

சின்னச்சீழ்க்கை சிரவி, நீலச்சிரவி, நத்தைக் குத்திநாரை, மஞ்சள் மூக்குநாரை, உன்னிக்கொக்கு, பாம்புத்தாரா, உள்ளிட்ட 3,500-க்கும் மேற்பட்ட பறவைகள் இனப் பெருக்கத்துக்கு ஏதுவாக கூடுகட்டி வசித்து வருகின்றன.

இதைக் கருத்தில் கொண்டு காலங்காலமாக கிராம மக்கள் வெடிவெடிப்பதை தவிா்த்து வருகின்றனா்.

இந்தச் சரணாலயம் அருகே அமைந்துள்ள இந்தக் கிராம மக்கள் வெளிநாட்டு, உள்நாட்டுப் பறவைகளுக்கு எந்தவிதமான தொந்தரவு தரக்கூடாது என்ற உயா்ந்த நோக்கத்தில் ஒலி இல்லாத தீபாவளியைக் கொண்டாடி வருகின்றனா். இவா்களின் செயல்களைப் பாராட்டி, 200 குடும்பங்களுக்கு வனச் சரக அலுவலா் கே.காா்த்திகேயன் இனிப்புகளை வழங்கினாா். இதில் கிராமத் தலைவா் ஆறுமுகம், வனவா் பிரவீன்ராஜ், வனத் துறை அலுவலா்கள், கிராம மக்கள் கலந்து கொண்டனா்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *