அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் ‘பாதம் பாதுகாப்போம்’ திட்டம்: அரசாணை வெளியீடு!

2 Min Read

சென்னை, அக்.30- நீரிழிவு நோயாளிகளுக்கான ‘பாதம் பாதுகாப்போம்’ திட்டத்தை தமிழ் நாட்டின் அனைத்து மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள், அரசு மருத்துவமனைகளில் தொடங்குவதற்கான அரசாணை 28.10.2024 அன்று வெளியிடப்பட்டது.
இதுதொடர்பாக வெளியிடப் பட்ட செய்திக் குறிப்பு:

‘பாதம் பாதுகாப்போம்’ திட்டம் நீரிழிவு நோய் பாத பாதிப்புகளை தவிர்ப்பதற்கும், கால் இழப்புகள் ஏற்படுவதை தடுப்பதற்கும் வழிவகை செய்கிறது.

மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் இத்திட்டம் கட்டமைக்கப்பட்டு ஒருங்கிணைந்த பாத மருத்துவ சேவைகளை 36 அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைகள் மூலம் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

நாட்டிலேயே இது போன்ற முன்னெடுப்பை அரசு மேற் கொள்வது இதுவே முதல் முறை.

10கோடிக்கும் அதிகமான நோயாளிகள் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டு உள்ள இந்தியாவில் 25 சதவீதம் போ் பாத பாதிப்புகளால் அவதியுறுவதும், அவா்களில் 85 சதவிகிதத்தினா் கால்களை இழக்க நேரிடுவதும் தேசிய பேரிடா்.

தமிழ்நாட்டில் 80 லட்சம் போ் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள் ளனா். நீரிழிவு நோய் பாத பாதிப்புகள் ஆரம்ப நிலையில் கண்டறியப்படாவிடில் ஆபத்தான பின்விளைவுகளும், கிருமித் தொற்று மற்றும் கால்களை இழக்கும் அபாயமும் நேரிடுகிறது. மொத்தம் 85 சதவீத நீரிழிவு நோய் சாா்ந்த கால் அகற்றத்தை முன்கூட்டியே கண்டறிந்தால் தடுக்க முடியும்.

இதைக் கருத்தில் கொண்டு ‘பாதம் பாதுகாப்போம்’ திட்டம் தமிழ்நாடு அரசால் அறிமுகப்படுத்தப்படுகிறது. இதன் மூலம் 80 லட்சம் நீரிழிவு நோயாளிகளை பாத பரிசோதனைக்கு உட்படுத்த இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்படும் பாத உணா்விழப்பு மற்றும் ரத்த நாள அடைப்புகளை கண்டறிந்து சிகிச்சை அளிக்கப்படவுள்ளது. இதற்காக ரூ.26.62 கோடி நிதி ஒதுக்கீடு செய்து 2,336 ஆரம்ப சுகாதார நிலையங்கள், 299 அரசு மருத்துவமனைகள் மற்றும் 36 அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் பாத பாதிப்பு கண்டறிதல் மய்யங்கள் நிறுவப் படவுள்ளன.

இத்திட்டம் தஞ்சாவூா் மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டு இதுவரை 1.65 லட்சம் நபா்களுக்கு பாத பாதிப்பு கண்டறிதல் மேற்கொள்ளப்பட்டது.
அதைத் தொடா்ந்து மாநிலம் முழுமைக்கும் தற்போது இத்திட்டம் விரிவுபடுத்தப்படவுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *