41,500 ரயில்வே பணிகளுக்கு தேர்வு தேதி மாற்றம்

viduthalai
1 Min Read

ரயில்வே தேர்வு வாரியத்தால் (RRB) லோகோ பைலட், எஸ்அய், டெக்னிசியன், ஜெ.இ. பதவிகளில் காலியாக இருந்த 41,500 பதவிகளுக்கு விண்ணப்பம் பெறப்பட்டு, தேர்வு தேதி அறிவிக்கப்பட்டிருந்தது. அந்தத் தேதியை (RRB) மாற்றியுள்ளது. அதன்படி, லோகோ பைலட்டுக்கான தேர்வு நவ.25- நவ.29, எஸ்அய். தேர்வு டிச.2-டிச.12, டெக்னிசியன் தேர்வு டிச.18 – டிச.29, ஜெ.இ. தேர்வு டிச.13-டிச.17 வரை நடைபெறவுள்ளது.

கோல் இந்தியா
நிறுவனத்தில் பணி வாய்ப்பு

கோல் இந்தியா (COAL INDIA) நிறுவனத்தில் 640 காலியிடங்களுக்கு விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது. மைனிங், சிவில், எலெக்ட்ரீகல், மெக்கானிக்கல் உள்ளிட்ட பதவிகளுக்கு இந்த விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது. இதற்கான விண்ணப்பப்பதிவு இணையத்தில் நேற்று (29.10.2024) தொடங்கியது. இதற்கு விண்ணப்பிக்க நவம்பர் 28ஆம் தேதி கடைசி நாளாகும். வேலை குறித்த கூடுதல் தகவலை www.coalindia.in என்ற இணையதளத்தில் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.

போட்டித் தேர்வுக்கு இலவசப் பயிற்சி

அரசுப் பணி போட்டித் தேர்வு எழுதுவோருக்கு கல்வி தொலைக்காட்சியில் இலவச பயிற்சி வகுப்பு தொடங்கியுள்ளது. அதில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம், சீருடை பணியாளர் தேர்வாணையம், ஆசிரியர் தேர்வு வாரியம், ரயில்வே தேர்வு வாரியம் உள்ளிட்டவை நடத்தும் தேர்வில் பங்கேற்போருக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. நவ.1 வரை நாள்தோறும் காலை 7-9 மணிவரை நேரலையும், மறு ஒளிபரப்பை இரவு 7-9 மணி வரையும் காணலாம்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *